பட்டுக்கோட்டை, மே 1:
ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்றார் மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலருமான கனிமொழி.
பட்டுக்கோட்டையில் நேற்று ( சனிக்கிழமை ) இரவு நடைபெற்ற திமுக கூட்டணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே. மகேந்திரனை ஆதரித்து அவர் பேசியது:
பட்டுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மகேந்திரன் இந்த மண்ணின் மைந்தர். என்றைக்கும் உங்களோடு இருப்பார். உங்களுக்காக உழைப்பார். மக்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்.
ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் ஜெயலலிதா வாக்களித்த மக்களைச் சந்தித்தாரா ? அதிகாரிகளை சந்தித்தாரா ? என்றால் யாரையும் சந்திக்கவில்லை. தமிழக முதல்வரை சந்திக்க முடியவில்லை என மத்திய அமைச்சரே புகார் கூறுகிறார். இப்படி யாருமே சந்திக்க முடியாத ஒரு முதலமைச்சர் நமக்குத் தேவையா ?
தமிழக விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை போராட்டம் நடத்தினார்கள். ஜெயலலிதா அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. விவசாயிகளின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளவும் இல்லை. எனவே, தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. ஜெயலலிதா ஆட்சி முடிவுக்கு வந்தால்தான் விவசாயிகள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலன் பாதுகாக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள் அனைத்தையும் கருணாநிதி கண்டிப்பாக நிறைவேற்றுவார்' என்றார் கனிமொழி.
ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்றார் மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலருமான கனிமொழி.
பட்டுக்கோட்டையில் நேற்று ( சனிக்கிழமை ) இரவு நடைபெற்ற திமுக கூட்டணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே. மகேந்திரனை ஆதரித்து அவர் பேசியது:
பட்டுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மகேந்திரன் இந்த மண்ணின் மைந்தர். என்றைக்கும் உங்களோடு இருப்பார். உங்களுக்காக உழைப்பார். மக்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்.
ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் ஜெயலலிதா வாக்களித்த மக்களைச் சந்தித்தாரா ? அதிகாரிகளை சந்தித்தாரா ? என்றால் யாரையும் சந்திக்கவில்லை. தமிழக முதல்வரை சந்திக்க முடியவில்லை என மத்திய அமைச்சரே புகார் கூறுகிறார். இப்படி யாருமே சந்திக்க முடியாத ஒரு முதலமைச்சர் நமக்குத் தேவையா ?
தமிழக விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை போராட்டம் நடத்தினார்கள். ஜெயலலிதா அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. விவசாயிகளின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளவும் இல்லை. எனவே, தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. ஜெயலலிதா ஆட்சி முடிவுக்கு வந்தால்தான் விவசாயிகள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலன் பாதுகாக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள் அனைத்தையும் கருணாநிதி கண்டிப்பாக நிறைவேற்றுவார்' என்றார் கனிமொழி.








No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.