.

Pages

Monday, May 2, 2016

TIYA சார்பில் அதிரையில் மாபெரும் புற்றுநோய் மருத்துவ முகாம் நடத்த முடிவு !

அண்மைக் காலமாக தமிழகமெங்கும் - குறிப்பாக காலம் காலமாக அமைதியும் ஆரோக்கியமும் செழித்துத்திகழும் நமதூரில் உயிர்க்கொல்லி நோயான “கேன்ஸர்” என்ற புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதும், இக்கொடிய நோயால், நமது உற்றத்திலும் சுற்றத்திலும் உள்ள பல சகோதர சகோதரிகள் விலைமதிக்க முடியாத நமது இன்னுயிரை இழப்பதும், நமது அனைவரையும் மிகுந்த கவலையிலும் பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த அபாயகரமான நிலையிலிருந்து நமது மக்களை இறைவன் அருளால் முடிந்த அளவு மீட்டு எடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது நம் அனைவரின் பொறுப்பும் கடமையுமாகும்.

இம் முயற்சியின் ஒரு பகுதியாக புற்றுநோய் குறித்து சிறு விழிப்புணர்வு நமதூரிலும் ஏற்படுத்தும் விதமாக இந்த பயங்கர நோய் ஏன் ? எதனால் ஏற்படுகிறது ? எப்படியெல்லாம் பரவுகிறது ? இதற்கான பரிசோதனைகள், சிகிச்சைகள் என்னென்ன ? இந்நோயிலிருந்து பாதுகாப்பதற்கான வழி முறைகள் என்னென்ன ? என்பது குறித்து விபரங்கள் பொது மக்கள் நலன் கருதி நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இறைவன் கிருபையால் இக்கொடிய நோயை விட்டு பொதுமக்களை பாதுகாக்கும் முயற்சியில் TIYA ஈடுபட முடிவு செய்துள்ளது.

இதன் முதற்கட்ட முயற்சியாக கடந்த 29-04-2016 அன்று MEHA அமீரக நிர்வாகிகளை நமது TIYA நிர்வாகிகள் சந்தித்து இதுதொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. இன்ஷா அல்லாஹ் விரைவில் நமதூர் அதிரையில் மிகப்பெரிய புற்று நோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட முயற்சியில் அமீரக TIYA நிர்வாகிகள் ஈடுப்பட்டு வருகிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் அனைவருக்கு ஆரோக்கியத்தைத் தந்து எல்லாவிதமான் நோய் நொடிகளை விட்டும் பாதுகாப்பானாக! ஆமீன்.

என்றும் அன்புடன்
அமீரக TIYA நிர்வாகிகள்

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.