.

Pages

Wednesday, November 2, 2016

ஐகோர்ட் தடை உத்தரவால் அதிரையில் பத்திரப்பதிவு மந்தம் !

அதிராம்பட்டினம், நவ-02
அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பதிவு செய்யக்கூடாது என்ற ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, அதிராம்பட்டினம் பத்திரப்பதிவு அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றவோ, அங்கீகாரம் இல்லாத நிலம், கட்டிடங்களைப் பத்திரப்பதிவு செய்யவோ அனுமதிக்கக் கூடாது’ என உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு, விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றவும், அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகள், கட்டிடங்களைப் பத்திரப்பதிவு செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகமெங்கும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் பதிவு செய்வது நிறுத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் மாதந்தோறும் சராசரியாக நடந்து வந்த 300 க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு தற்போது குறைந்துள்ளது. மேலும் பத்திரப்பதிவு அலுவலகம், பொதுமக்களின் வருகை குறைந்து வெறிச்சோடியாக காணப்படுகிறது.

இதுகுறித்து, ரியல் எஸ்டேட் புரோக்கர் அதிரை மைதீன் கூறுகையில், 'அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பலர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஐகோர்ட் தடை உத்தரவால் இப்பகுதியில் மனைகள் வாங்குவது, விற்பது கடும் பாதிப்படைந்துள்ளது. அதிராம்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் சராசரியாக 300க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவுகள் நடைபெறும். நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்வு, ரியல் எஸ்டேட் மந்தநிலை காரணமாக ஏற்கனவே பத்திரப்பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. தற்போது ஐகோர்ட் தடை உத்தரவால் பத்திரப்பதிவு செய்வது அறவே குறைந்துள்ளது. இதனால் பத்திரப்பதிவு அலுவலகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது' என்றார்.

1 comment:

  1. Madras High court order is late but latest. In Afirampattinam already registered wakf land illegally.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.