தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் நலனுக்காக பாரத பிரதமரின் புதிய 15 அம்ச திட்டம் காலாண்டு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (19.01.2018) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தமிழ்நாடு சிறுபான்மையினரின் நலனுக்காக பாரத பிரதமரின் புதிய 15 அம்ச திட்டத்தின் கீழ் துறைவாரியாக மாவட்டங்களில் செயல்படுத்தும் திட்டங்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவராகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, முதன்மை கல்வி அலுவலர், மண்டல இணை இயக்குநர், கல்லூரி கல்வியகம், மாவட்ட தொழிலாளர் நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர் உறுப்பினராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உறுப்பினர்-செயலர் ஆகவும் கொண்டு செயல்படுகின்றது.
இக்குழுவானாது ஒவ்வொரு காலாண்டிலும் பாரத பிரதமரின் 15 அம்ச திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு சிறுபான்மையின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்வார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 அம்ச திட்டங்களான குழந்தை வளர்ச்சி திட்டம், சிறுபான்மையின மக்கள் பள்ளி கல்வி மேம்படுத்துதல், உருது கல்வி மேம்படுத்துதல், மதரஸா கல்வியை மேம்படுத்துதல், கல்வி உதவித் தொகை, மௌலானா ஆசாத் கல்வி மூலம் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல், சுய தொழில் மற்றும் ஏழைகளின் கூலி தொழில் திட்டம், தொழில்நுட்ப பயிற்சின் மூலம் திறமையை மேம்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் மத்திய மாநில அரசு பணிகளில் சேர்க்கப்பட்ட விவரங்கள், ஊரக வீட்டு வசதி திட்டம், சிறுபான்மையினர் மக்கள் வசிக்கும் குடிசை பகுதிகளில் வசதிகள் மேம்படுத்துதல், இனக்கலவரத்தை தடுத்தல், இனக்கலவர வழக்குகளில் நடவடிக்கை எடுத்தல், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு மறுவாழ்வு அளித்தல் போன்ற பணிகள் துறை வாரியாக முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை குழுவானது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொண்டு சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டினை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், கூட்டுறவு இணை பதிவாளர் ஏகாம்பரம், மகளிர் ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் இந்துபாலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ்குமார், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தமிழ்நாடு சிறுபான்மையினரின் நலனுக்காக பாரத பிரதமரின் புதிய 15 அம்ச திட்டத்தின் கீழ் துறைவாரியாக மாவட்டங்களில் செயல்படுத்தும் திட்டங்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவராகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, முதன்மை கல்வி அலுவலர், மண்டல இணை இயக்குநர், கல்லூரி கல்வியகம், மாவட்ட தொழிலாளர் நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர் உறுப்பினராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உறுப்பினர்-செயலர் ஆகவும் கொண்டு செயல்படுகின்றது.
இக்குழுவானாது ஒவ்வொரு காலாண்டிலும் பாரத பிரதமரின் 15 அம்ச திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு சிறுபான்மையின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்வார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 அம்ச திட்டங்களான குழந்தை வளர்ச்சி திட்டம், சிறுபான்மையின மக்கள் பள்ளி கல்வி மேம்படுத்துதல், உருது கல்வி மேம்படுத்துதல், மதரஸா கல்வியை மேம்படுத்துதல், கல்வி உதவித் தொகை, மௌலானா ஆசாத் கல்வி மூலம் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல், சுய தொழில் மற்றும் ஏழைகளின் கூலி தொழில் திட்டம், தொழில்நுட்ப பயிற்சின் மூலம் திறமையை மேம்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் மத்திய மாநில அரசு பணிகளில் சேர்க்கப்பட்ட விவரங்கள், ஊரக வீட்டு வசதி திட்டம், சிறுபான்மையினர் மக்கள் வசிக்கும் குடிசை பகுதிகளில் வசதிகள் மேம்படுத்துதல், இனக்கலவரத்தை தடுத்தல், இனக்கலவர வழக்குகளில் நடவடிக்கை எடுத்தல், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு மறுவாழ்வு அளித்தல் போன்ற பணிகள் துறை வாரியாக முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை குழுவானது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொண்டு சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டினை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், கூட்டுறவு இணை பதிவாளர் ஏகாம்பரம், மகளிர் ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் இந்துபாலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ்குமார், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.