.

Pages

Thursday, June 14, 2018

புனித மக்காவின் புனிதப் பள்ளியின் தவாப் சுற்றும் பகுதியை 10 நிமிடத்திற்குள் சுத்தம் செய்து சாதனை!

அதிரை நியூஸ்: ஜூன் 14
புனித கஃபத்துல்லாஹ் உடைய மக்காவின் ஹரம் ஷரீஃப் பள்ளிக்கு உம்ரா, ஹஜ் போன்ற யாத்திரைகளை நிறைவேற்றுவதற்காக சென்று வந்தோர் அங்கு 24 மணிநேரமும் நடைபெற்று வரும் சுத்தப்படுத்தும் நிகழ்வை கண்டு வியந்திருப்பீர்கள். சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் லாவகமும், விவேகமும், வேகமும் நம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒன்றாகும்.

புனிதப் பள்ளியின் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக சுமார் 3,000 ஆண், பெண் பணியாளர்கள் 24 மணிநேரமும் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுடைய முக்கியப் பணிகளாக கார்பெட் சுத்தம் செய்தல், கிருமி நாசினிகளை உபயோகித்தல், குப்பைகளை அகற்றுதல், தொழுகைக்காக கார்பெட் விரித்தல், நோன்பு திறக்கும் நேரத்தில் சுப்ரா விரித்தல் போன்ற பணிகளும் அடங்கும். இந்த ரமலானில் கூடுதலாக 300 துப்புரவு பணியாளர்களும், 100 சுப்ரா விரிப்பாளர்கள் நோன்பு திறக்கும் நிகழ்வுக்காகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பொதுவாக ஜமாஅத் தொழுகை ஹரம் ஷரீஃபில் நடைபெறும் நேரத்தை தவிர பிற நேரங்களில் இடைவிடாது சுத்தம் செய்யப்படும். கடந்த 27 ஆம் இரவின் மஃரிப் தொழுகைக்குப் பின் உடனடியாக தவாப் சுற்றும் மடஃப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் முழு மடஃப் பகுதியையும் சுமார் 9.47 நிமிட நேரத்திற்குள் மின்னல் வேகத்தில் சுத்தம் செய்து முதன்முறையாக சாதனை செய்துள்ளனர்.

மேலும் அன்றைய இரவு புனிதப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார வளாகங்களிலிருந்து சுமார் 291 டன் குப்பைகளையும் அகற்றியுள்ளனர். ஹரமில் சுமார் 25,000 கார்பெட்டுக்கள், 1,500 பெரிய அளவு குப்பை தொட்டிகளும், 1,500 சிறிய அளவு குப்பை தொட்டிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.