அதிராம்பட்டினம், ஜூன் 04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் ரமலான் கமிட்டி மற்றும் நாம் மனிதர் அமைப்பின் சார்பில், இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலான் முழுவதும் 'சஹர்' நேர விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி களை கட்டி வருகிறது. அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் வளாகம் மற்றும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே உள்ள நாம் மனிதர் கட்சி அலுவலகம் ஆகிய இருவேறு இடங்களில், கடந்த மே 17 ந் தேதி (ரமலான் பிறை 1) தொடங்கி நடைபெற்று வருகின்றன. இவை, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தக்வா பள்ளிவாசலில்...
அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் ரமலான் கமிட்டி சார்பில், சஹர் நேர விருந்து உபசரிப்பு பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், தொலை தூரப் பயணிகள், சஹர் நேர உணவு தயார் செய்ய இயலாதவர்கள், விடுதியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள், வெளியூர் பணியாளர்கள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட நோன்பாளிகள் கலந்துகொண்டு பயனடைகின்றனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அமரவைக்கப்பட்டு விருந்து பரிமாறப்படுகிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 3.40 மணி வரை நடைபெறுகிறது. அதிரையின் பிரபல மேஸ்திரி சாலிகு தயாரிப்பில், அதிரையில் பிரசித்தம் பெற்ற பிரியாணி, அஞ்சு கறி, தால்ச்சா, மீன் குழம்பு, சாம்பார், மீன் வறுவல், கோழி வறுவல், காய்கறி கூட்டு, பொறியல், புளியாணம் (ரசம்), தொக்கு, சுவிட் உள்ளிட்டவை தினமும் வழங்குகின்ற அறுசுவை உணவு வகைகளில் இடம் பிடித்துள்ளன.
முன்னதாக, சஹர் உணவை உண்டு நோன்பு வைக்கும் நோன்பாளிகள் ஒவ்வொருவருக்கும் தக்வா பள்ளிவாசல் ரமலான் கமிட்டி சார்பில் டோக்கன் வழங்கப்படுகிறது.
நாம் மனிதர் கட்சி சார்பில்....
தினந்தோறும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே உள்ள அக்கட்சி அலுவலக விருந்தினர் பகுதி வளாகத்தில் நடைபெறும் சஹர் நேர 'சஹன்' விருந்து உபசரிப்பில், தொலை தூரப் பயணிகள், சஹர் நேர உணவு தயார் செய்ய இயலாதவர்கள், விடுதியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள், வெளியூர் பணியாளர்கள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட நோன்பாளிகள் கலந்துகொண்டு பயனடைகின்றனர். இதுதவிர, இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறிமுறையாக ஏற்றவர்களுக்கு சஹர் உணவை தேடிச்சென்று வழங்கி வருகின்றனர்.
உபசரிப்பின் ஒவ்வொரு சஹனிலும் தலா 4 பேர் வீதம், ஒன்றாக அமர்ந்து சஹர் உணவை உண்டு நோன்பு வைக்கின்றனர். பின்னர், அனைவருக்கும் சுடச் சுட தேநீர் வழங்கப்படுகிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 3.30 மணி வரை நடைபெறுகிறது. இதில், அதிராம்பட்டினம் ஹயாத் ரெஸ்டாரண்ட் பிரபல மேஸ்திரி ஜாஹிர் தயாரிப்பில், அதிரையில் பிரசித்தம் பெற்ற பிரியாணி, அஞ்சு கறி, தால்ச்சா, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு, மீன் வறுவல், சாம்பார், காய்கறி கூட்டு, வறுவல், புளியாணம் (ரசம்), தொக்கு, சுவிட் உள்ளிட்டவை தினமும் வழங்குகின்ற அறுசுவை உணவு வகைகளில் இடம் பிடித்துள்ளன.
களத்திலிருந்து...
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
முகமது அஜீம் (மாணவச் செய்தியாளர்)
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் ரமலான் கமிட்டி மற்றும் நாம் மனிதர் அமைப்பின் சார்பில், இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலான் முழுவதும் 'சஹர்' நேர விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி களை கட்டி வருகிறது. அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் வளாகம் மற்றும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே உள்ள நாம் மனிதர் கட்சி அலுவலகம் ஆகிய இருவேறு இடங்களில், கடந்த மே 17 ந் தேதி (ரமலான் பிறை 1) தொடங்கி நடைபெற்று வருகின்றன. இவை, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தக்வா பள்ளிவாசலில்...
அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் ரமலான் கமிட்டி சார்பில், சஹர் நேர விருந்து உபசரிப்பு பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், தொலை தூரப் பயணிகள், சஹர் நேர உணவு தயார் செய்ய இயலாதவர்கள், விடுதியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள், வெளியூர் பணியாளர்கள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட நோன்பாளிகள் கலந்துகொண்டு பயனடைகின்றனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அமரவைக்கப்பட்டு விருந்து பரிமாறப்படுகிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 3.40 மணி வரை நடைபெறுகிறது. அதிரையின் பிரபல மேஸ்திரி சாலிகு தயாரிப்பில், அதிரையில் பிரசித்தம் பெற்ற பிரியாணி, அஞ்சு கறி, தால்ச்சா, மீன் குழம்பு, சாம்பார், மீன் வறுவல், கோழி வறுவல், காய்கறி கூட்டு, பொறியல், புளியாணம் (ரசம்), தொக்கு, சுவிட் உள்ளிட்டவை தினமும் வழங்குகின்ற அறுசுவை உணவு வகைகளில் இடம் பிடித்துள்ளன.
முன்னதாக, சஹர் உணவை உண்டு நோன்பு வைக்கும் நோன்பாளிகள் ஒவ்வொருவருக்கும் தக்வா பள்ளிவாசல் ரமலான் கமிட்டி சார்பில் டோக்கன் வழங்கப்படுகிறது.
நாம் மனிதர் கட்சி சார்பில்....
தினந்தோறும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே உள்ள அக்கட்சி அலுவலக விருந்தினர் பகுதி வளாகத்தில் நடைபெறும் சஹர் நேர 'சஹன்' விருந்து உபசரிப்பில், தொலை தூரப் பயணிகள், சஹர் நேர உணவு தயார் செய்ய இயலாதவர்கள், விடுதியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள், வெளியூர் பணியாளர்கள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட நோன்பாளிகள் கலந்துகொண்டு பயனடைகின்றனர். இதுதவிர, இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறிமுறையாக ஏற்றவர்களுக்கு சஹர் உணவை தேடிச்சென்று வழங்கி வருகின்றனர்.
உபசரிப்பின் ஒவ்வொரு சஹனிலும் தலா 4 பேர் வீதம், ஒன்றாக அமர்ந்து சஹர் உணவை உண்டு நோன்பு வைக்கின்றனர். பின்னர், அனைவருக்கும் சுடச் சுட தேநீர் வழங்கப்படுகிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 3.30 மணி வரை நடைபெறுகிறது. இதில், அதிராம்பட்டினம் ஹயாத் ரெஸ்டாரண்ட் பிரபல மேஸ்திரி ஜாஹிர் தயாரிப்பில், அதிரையில் பிரசித்தம் பெற்ற பிரியாணி, அஞ்சு கறி, தால்ச்சா, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு, மீன் வறுவல், சாம்பார், காய்கறி கூட்டு, வறுவல், புளியாணம் (ரசம்), தொக்கு, சுவிட் உள்ளிட்டவை தினமும் வழங்குகின்ற அறுசுவை உணவு வகைகளில் இடம் பிடித்துள்ளன.
களத்திலிருந்து...
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
முகமது அஜீம் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.