அதிரை நியூஸ்: ஜூன் 04
அமீரகத் தலைநகர் அபுதாபியில் மர்ஹபா சமூக நலப் பேரவை சார்பில், ”சமூக நல்லிணக்க பெருவிழா” 02.06.2018 (சனிக்கிழமை மாலை) ISC (India Social & Cultural Centre), அபுதாபி, பெரு அரங்கில் (லால்பேட்டை மெளலவி முப்தி S.A.அப்துர் ரப் ஹஜ்ரத் நினைவரங்கம்) நடைபெற்றது.
விழாவிற்கு M. ஷூஐபுதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். ஹாஜி S.A. முஹம்மது தையுப், A.H. நஜீர் அஹமது, M. தாஜூதீன், ஹாஜி S.M. முஹம்மது அன்வர் மற்றும் ஜனாப் முஹம்மது மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல் அமர்வை (இஃப்தாருக்கு முன்) செல்வி S. சஹ்லா ஷூஐப் இறைமறை வசனங்களை ஓதி துவக்கி வைக்க, சமூக நல்லிணக்கம் குறித்து துவக்க உரையினை மௌலவி M. முஹம்மது அபுதாஹிர் பாகவி (பேராசிரியர் சேலம் நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரி) ஆற்றினார், N. முஹம்மது சித்தீக் வரவேற்றுப் பேசினார். விழா தொகுப்புரையை S.A. ரஃபி அஹமது வழங்கினார்.
ஹாஜி M. ஷாஹூல் ஹமீது (CHAIRMAN – NOBLE GROUP OF COMPANIES), J. அப்துல் ஹமீது ஹாஜியார் (CHAIRMAN – BBMC GROUP OF COMPANIES), I S C (India Social & Cultural Centre) தலைவர் ரமேஷ் பனிக்கர், பாரதி நட்புக்காக தலைவர் ராம கிருஷ்ணன், பொதுச்செயலாளர் ஜனாப் M.B. ஹலீலுர் ரஹ்மான், தி.மு.க. திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பிரின்ஸ் என்கிற இளவரசு மற்றும் பாவை ஹனீஃபா, மனிதநேய கலாச்சார பேரவை - அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர், அபுதாபி இந்தியன் ஸ்கூல் தலைமை ஆசிரியர் அலாவுதீன், தமிழ் மக்கள் மன்றம் தலைவர் சிவராமன், IMF இந்திய முஸ்லிம் பேரவை பொதுச்செயலாளர் காதர் மீரான், அமீரக காயிதே மில்லத் பேரவை – அபுதாபி அமைப்பு செயலாளர் ஆவை A.S. முஹம்மது அன்சாரி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இரண்டாவது அமர்வில் (இஃப்தாருக்குப் பின்) எழுத்தாளர், ஊடகவியலார், சூழலியல் ஆர்வலர் ஆளுர். ஷாநவாஸ், (துணைப்பொதுச்செயலாளர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி), வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா B.A. BL. , (தி.மு.க. மாநில செய்தி தொடர்பு இணைச்செயலாளர்), M. தமிமுன் அன்சாரி M.A., M.L.A (நாகை சட்ட மன்ற உறுப்பினர், பொதுச்செயலாளர் மனித நேய ஜனநாயக கட்சி) ஆகியோர் வரலாற்று பிண்ணனியோடு அவர்களுக்கே உரித்தான தனித்தன்மையோடு, சிறுபான்மை சமூகம் தமிழகத்தில் – இந்தியாவில் சமூக நல்லிணக்கம் ஏன் தேவைப்படுகிறது? எப்படி கொண்டு வருவது, என்பதை குறித்து எழுச்சி பேருரைகளை அரங்கம் அதிர கைத்தட்டல்களோடு செவிக்கும், இதயத்திற்கும் மூவரும் நிறைவாக கொடுத்தனர்.
இறுதியில் H. முஹம்மது ஃபைசல் நன்றி கூறினார். மௌலவி மர்ஜூக் துஆவுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மர்ஹபாவின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இப்பெரு விழாவில் அமீரக வாழ் தமிழ் சமூகமும், பல ஊர் ஜமா’அத்தார்களும், தாய்மார்கள், பெண்கள், குழந்தைகள் என 1200க்கும் மேற்பட்டோர் திரளாக வந்து கலந்து கொண்டனர்.
விழாவில் மர்ஹபா சமூக நலப்பேரவை சார்பாக வைக்கப்பட்ட தீர்மாணங்கள்:
1) ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக ரத்து செய்வது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
2) தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையை இப்பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
3) அபுதாபி நகரில், இரண்டாவது பெரிய இந்திய சமூகமான தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு கலாச்சார மையம் அமைந்திட அரசு சார்ந்த பரிந்துரை வேண்டும்.
4) அமீரக வாழ் தமிழ் மக்களுக்கான நலன் மறுவாழ்வு தொடர்பாக தமிழக அமைச்சவையின் கீழ் ஒரு இலாக்கா உருவாக்கப்பட வேண்டும் (கேரளாவில் இதற்கான துறை செயல்பட்டுவருவது போல்).
5) அபுதாபி நகரில் உள்ள பள்ளிகளில் (ஸ்கூல்களில்) தமிழை விருப்பப் பாடமாக எடுத்து படிக்க வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, தமிழை விருப்பப் பாடமாக பள்ளிகளில் தமிழின மாணவர்கள் எடுத்து படிக்க ஆவன செய்ய வேண்டும்.
அமீரகத் தலைநகர் அபுதாபியில் மர்ஹபா சமூக நலப் பேரவை சார்பில், ”சமூக நல்லிணக்க பெருவிழா” 02.06.2018 (சனிக்கிழமை மாலை) ISC (India Social & Cultural Centre), அபுதாபி, பெரு அரங்கில் (லால்பேட்டை மெளலவி முப்தி S.A.அப்துர் ரப் ஹஜ்ரத் நினைவரங்கம்) நடைபெற்றது.
விழாவிற்கு M. ஷூஐபுதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். ஹாஜி S.A. முஹம்மது தையுப், A.H. நஜீர் அஹமது, M. தாஜூதீன், ஹாஜி S.M. முஹம்மது அன்வர் மற்றும் ஜனாப் முஹம்மது மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல் அமர்வை (இஃப்தாருக்கு முன்) செல்வி S. சஹ்லா ஷூஐப் இறைமறை வசனங்களை ஓதி துவக்கி வைக்க, சமூக நல்லிணக்கம் குறித்து துவக்க உரையினை மௌலவி M. முஹம்மது அபுதாஹிர் பாகவி (பேராசிரியர் சேலம் நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரி) ஆற்றினார், N. முஹம்மது சித்தீக் வரவேற்றுப் பேசினார். விழா தொகுப்புரையை S.A. ரஃபி அஹமது வழங்கினார்.
ஹாஜி M. ஷாஹூல் ஹமீது (CHAIRMAN – NOBLE GROUP OF COMPANIES), J. அப்துல் ஹமீது ஹாஜியார் (CHAIRMAN – BBMC GROUP OF COMPANIES), I S C (India Social & Cultural Centre) தலைவர் ரமேஷ் பனிக்கர், பாரதி நட்புக்காக தலைவர் ராம கிருஷ்ணன், பொதுச்செயலாளர் ஜனாப் M.B. ஹலீலுர் ரஹ்மான், தி.மு.க. திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பிரின்ஸ் என்கிற இளவரசு மற்றும் பாவை ஹனீஃபா, மனிதநேய கலாச்சார பேரவை - அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர், அபுதாபி இந்தியன் ஸ்கூல் தலைமை ஆசிரியர் அலாவுதீன், தமிழ் மக்கள் மன்றம் தலைவர் சிவராமன், IMF இந்திய முஸ்லிம் பேரவை பொதுச்செயலாளர் காதர் மீரான், அமீரக காயிதே மில்லத் பேரவை – அபுதாபி அமைப்பு செயலாளர் ஆவை A.S. முஹம்மது அன்சாரி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இரண்டாவது அமர்வில் (இஃப்தாருக்குப் பின்) எழுத்தாளர், ஊடகவியலார், சூழலியல் ஆர்வலர் ஆளுர். ஷாநவாஸ், (துணைப்பொதுச்செயலாளர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி), வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா B.A. BL. , (தி.மு.க. மாநில செய்தி தொடர்பு இணைச்செயலாளர்), M. தமிமுன் அன்சாரி M.A., M.L.A (நாகை சட்ட மன்ற உறுப்பினர், பொதுச்செயலாளர் மனித நேய ஜனநாயக கட்சி) ஆகியோர் வரலாற்று பிண்ணனியோடு அவர்களுக்கே உரித்தான தனித்தன்மையோடு, சிறுபான்மை சமூகம் தமிழகத்தில் – இந்தியாவில் சமூக நல்லிணக்கம் ஏன் தேவைப்படுகிறது? எப்படி கொண்டு வருவது, என்பதை குறித்து எழுச்சி பேருரைகளை அரங்கம் அதிர கைத்தட்டல்களோடு செவிக்கும், இதயத்திற்கும் மூவரும் நிறைவாக கொடுத்தனர்.
இறுதியில் H. முஹம்மது ஃபைசல் நன்றி கூறினார். மௌலவி மர்ஜூக் துஆவுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மர்ஹபாவின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இப்பெரு விழாவில் அமீரக வாழ் தமிழ் சமூகமும், பல ஊர் ஜமா’அத்தார்களும், தாய்மார்கள், பெண்கள், குழந்தைகள் என 1200க்கும் மேற்பட்டோர் திரளாக வந்து கலந்து கொண்டனர்.
விழாவில் மர்ஹபா சமூக நலப்பேரவை சார்பாக வைக்கப்பட்ட தீர்மாணங்கள்:
1) ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக ரத்து செய்வது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
2) தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையை இப்பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
3) அபுதாபி நகரில், இரண்டாவது பெரிய இந்திய சமூகமான தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு கலாச்சார மையம் அமைந்திட அரசு சார்ந்த பரிந்துரை வேண்டும்.
4) அமீரக வாழ் தமிழ் மக்களுக்கான நலன் மறுவாழ்வு தொடர்பாக தமிழக அமைச்சவையின் கீழ் ஒரு இலாக்கா உருவாக்கப்பட வேண்டும் (கேரளாவில் இதற்கான துறை செயல்பட்டுவருவது போல்).
5) அபுதாபி நகரில் உள்ள பள்ளிகளில் (ஸ்கூல்களில்) தமிழை விருப்பப் பாடமாக எடுத்து படிக்க வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, தமிழை விருப்பப் பாடமாக பள்ளிகளில் தமிழின மாணவர்கள் எடுத்து படிக்க ஆவன செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.