அதிராம்பட்டினம், ஆக. 01
கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அதிராம்பட்டினம் வீரர் வஜீர் அலி கலந்து கொண்டார்.
கோவை மாநகரக் காவல் துறை மற்றும் ரைபிள் கிளப் இணைந்து, கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் 45-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியை கடந்த 28-ஆம் தேதி முதல் நடத்தி வருகின்றன. போட்டியை கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தொடங்கி வைத்தார்.
இதில், தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களில் இருந்து வந்த 1300 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில் அதிராம்பட்டினம் வீரர் வஜீர் அலி (வயது 45) 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆகிய பிரிவுகளிலும் அவரது சகோதரர் தைஷீர் அலி ஆகியோர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் கலந்துகொண்டு விளையாடினர்.
இந்தப் போட்டியில், பிரபல சினிமா நடிகர் அஜீத் குமார் 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் பிரிவில் வஜீர் அலியுடன் இணைந்து ஆடியது குறிப்பிடத்தக்கது.
கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அதிராம்பட்டினம் வீரர் வஜீர் அலி கலந்து கொண்டார்.
கோவை மாநகரக் காவல் துறை மற்றும் ரைபிள் கிளப் இணைந்து, கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் 45-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியை கடந்த 28-ஆம் தேதி முதல் நடத்தி வருகின்றன. போட்டியை கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தொடங்கி வைத்தார்.
இதில், தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களில் இருந்து வந்த 1300 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில் அதிராம்பட்டினம் வீரர் வஜீர் அலி (வயது 45) 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆகிய பிரிவுகளிலும் அவரது சகோதரர் தைஷீர் அலி ஆகியோர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் கலந்துகொண்டு விளையாடினர்.
இந்தப் போட்டியில், பிரபல சினிமா நடிகர் அஜீத் குமார் 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் பிரிவில் வஜீர் அலியுடன் இணைந்து ஆடியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.