.

Pages

Thursday, August 1, 2019

உலக தாய்ப்பால் வார விழா தொடக்கம் ~ விழிப்புணர்வு பேரணி!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி குழந்தைநலப் பிரிவு, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் மற்றும் தஞ்சாவூர் லயன்ஸ் கிளப் ஹோஸ்ட் சார்பில் உலக தாய்ப்பால் வார துவக்க விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமையில் இன்று ( 01.08.2019 ) நடைபெற்றது. 

உலக தாய்ப்பால் வார துவக்க விழா மற்றும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து கலந்துகொண்ட பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:-
தாய்ப்பால் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உலக தாய்பால் வாரத்தின் நோக்கமாகும். தாய்ப்பால் கொடுப்பது பாலூட்டும் உயிரினங்களுக்கு மட்டும் உரிய ஒரு மகத்துவமான விஷயமாகும். தாய்ப்பால் என்பது தாயிடமிருந்து குழந்தைக்கு கொடுக்கப்படும் உணவு என்பதைத் தாண்டி, தாயிடமிருந்து குழந்தைக்கு அளிக்கப்படும் நோய் எதிர்;ப்பு சக்திக்கான மருந்தாகும். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகள் மட்டும் பயனடைவதுமட்டுமல்லாமல், தாய்மார்களுக்கும் மார்பக புற்று நோய் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகள் மூலம் நாட்டின் எதிர்காலம் ஆரோக்கியமாக அமையும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆ. அண்ணாதுரை பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் குமுதா லிங்கராஜ், மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மரு. எம். சிங்காரவேலு, தஞ்சாவூர் லயன்ஸ் கிளப் ஹோஸ்ட் தலைவர் ஜி. சின்னத்துரை, குழந்தைகள் நல பிரிவின் துறைத் தலைவர் எஸ். இராஜசேகர் மற்றும் மருத்துவர்கள், மாணவர்கள், செவிலியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.