அதிராம்பட்டினம், பிப்.29
பட்டுக்கோட்டை வட்டம், தம்பிக்கோட்டை மறவக்காடு பாட்டுவனாட்சியார் பாலம் அருகே அதிராம்பட்டினம் போலீஸார் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அந்த காரில் 6 மூட்டைகளில் 220 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகளையும், அதை கடத்தப் பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக காரில் இருந்த மறவக்காடு கே.வெங்கட்ராமன் (48), தம்பிக்கோட்டை முருகேசன் (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் கஞ்சா கடத்தல் சம்பவத்தில் மறவக்காடு குமார், பட்டுக்கோட்டை ஆர்.வி.நகரைச் சேர்ந்த அய்யம்பெருமாள் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மறவக்காடு குமார் (38) சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். தலைமறைவான அய்யம்பெருமாளை போலீஸார் தேடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை வட்டம், தம்பிக்கோட்டை மறவக்காடு பாட்டுவனாட்சியார் பாலம் அருகே அதிராம்பட்டினம் போலீஸார் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அந்த காரில் 6 மூட்டைகளில் 220 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகளையும், அதை கடத்தப் பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக காரில் இருந்த மறவக்காடு கே.வெங்கட்ராமன் (48), தம்பிக்கோட்டை முருகேசன் (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் கஞ்சா கடத்தல் சம்பவத்தில் மறவக்காடு குமார், பட்டுக்கோட்டை ஆர்.வி.நகரைச் சேர்ந்த அய்யம்பெருமாள் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மறவக்காடு குமார் (38) சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். தலைமறைவான அய்யம்பெருமாளை போலீஸார் தேடி வருகின்றனர்.