அதிராம்பட்டினம், பிப்.02
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் உதய தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வலியுறுத்தி, தமிழகத்தில் நாகை, திண்டுக்கல், ஓசூர் ஆகிய 3 இடங்களில் 'யுனிட்டி மார்ச்' எனும் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவை எதிர்வரும் 17-02-2020 அன்று நடைபெற உள்ளது.
இதையொட்டி, அவ்வமைப்பின் சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி, அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் இன்று (02-02-2020) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.அபூபக்கர் சித்திக் முன்னிலை வகித்தார்.
இதில், அவ்வமைப்பின் 200 க்கும் மேற்பட்ட செயல்வீரர்கள் டிரம்ஸ் வாத்தியம் முழங்க கம்பீரமான அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் உதய தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வலியுறுத்தி, தமிழகத்தில் நாகை, திண்டுக்கல், ஓசூர் ஆகிய 3 இடங்களில் 'யுனிட்டி மார்ச்' எனும் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவை எதிர்வரும் 17-02-2020 அன்று நடைபெற உள்ளது.
இதையொட்டி, அவ்வமைப்பின் சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி, அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் இன்று (02-02-2020) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.அபூபக்கர் சித்திக் முன்னிலை வகித்தார்.
இதில், அவ்வமைப்பின் 200 க்கும் மேற்பட்ட செயல்வீரர்கள் டிரம்ஸ் வாத்தியம் முழங்க கம்பீரமான அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.