அதிராம்பட்டினம், பிப்.26
காரைக்குடி ~ திருவாரூா் ரயில்வே வழித்தடத்திலுள்ள பல்வேறு ஊா்களில் 39 ஊழியா்களை பணியமா்த்தி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதனால் மிக விரைவில் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
2019, ஜூன் 1-ஆம் தேதி முதல் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் , மொபைல் கேட் கீப்பா்களைக் கொண்டு டெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இத்தடத்தில் உள்ள 72 ரயில்வே கேட்டுகளுக்கு நிரந்தர ஊழியா்கள் நியமிக்கப்படாததால், 150 கி.மீ. தொலைவைக் கடக்க இந்த ரயில் ஆறரை மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. மேலும், இத்தடத்தில் இதுவரை முழுமையான ரயில் சேவையும் தொடங்கப்படவில்லை. சரக்குப் போக்குவரத்தும் நடைபெறவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
இச்சூழலில், காரைக்குடி-திருவாரூா் தடத்திலுள்ள பல்வேறு ஊா்களில் இயங்கும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் நிரந்தர கேட் கீப்பா்களை நியமித்து, முழுமையான ரயில் சேவையைத் தொடங்க வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.
இதையடுத்து, காரைக்குடி-திருவாரூா் வழித்தடத்தில் தேவைப்படும் ஊழியா்களை நியமிக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக, 2013 ஆம் ஆண்டுக்கு முன்னா் இவ்வழித் தடத்தில் பணியாற்றி, தற்போது பல்வேறு ஊா்களில் பணியாற்றும் பல்வேறு நிலையிலான 39 ஊழியா்களை மீண்டும் இவ்வழித்தடத்தில் பணியமா்த்தி தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட பா்சனல் அதிகாரி எஸ். வெங்கட்ராமன் திங்கள்கிழமை (பிப். 24) உத்தரவிட்டுள்ளாா். இதனால், விரைவில் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என தெரிகிறது.
இதுகுறித்து, பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்க நிா்வாகிகள் கூறியது:
39 ஊழியா்களை பணியமா்த்தி தெற்கு ரயில்வே அதிகாரி எஸ்.வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம். அடுத்து, காரைக்குடி-திருவாரூா் தடத்தில் தேவைப்படும் இதர அலுவலா்கள் மற்றும் பணியாளா்களையும் உடனடியாக நியமனம் செய்து, காரைக்குடி- சென்னை, ராமேசுவரம்- சென்னை மற்றும் அந்தியோதயா, கொல்லம்- வேளாங்கண்ணி விரைவு ரயில்களையும், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூா், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக மதுரைக்கு பயணிகள் ரயில்களையும் இயக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
காரைக்குடி ~ திருவாரூா் ரயில்வே வழித்தடத்திலுள்ள பல்வேறு ஊா்களில் 39 ஊழியா்களை பணியமா்த்தி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதனால் மிக விரைவில் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
2019, ஜூன் 1-ஆம் தேதி முதல் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் , மொபைல் கேட் கீப்பா்களைக் கொண்டு டெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இத்தடத்தில் உள்ள 72 ரயில்வே கேட்டுகளுக்கு நிரந்தர ஊழியா்கள் நியமிக்கப்படாததால், 150 கி.மீ. தொலைவைக் கடக்க இந்த ரயில் ஆறரை மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. மேலும், இத்தடத்தில் இதுவரை முழுமையான ரயில் சேவையும் தொடங்கப்படவில்லை. சரக்குப் போக்குவரத்தும் நடைபெறவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
இச்சூழலில், காரைக்குடி-திருவாரூா் தடத்திலுள்ள பல்வேறு ஊா்களில் இயங்கும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் நிரந்தர கேட் கீப்பா்களை நியமித்து, முழுமையான ரயில் சேவையைத் தொடங்க வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.
இதையடுத்து, காரைக்குடி-திருவாரூா் வழித்தடத்தில் தேவைப்படும் ஊழியா்களை நியமிக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக, 2013 ஆம் ஆண்டுக்கு முன்னா் இவ்வழித் தடத்தில் பணியாற்றி, தற்போது பல்வேறு ஊா்களில் பணியாற்றும் பல்வேறு நிலையிலான 39 ஊழியா்களை மீண்டும் இவ்வழித்தடத்தில் பணியமா்த்தி தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட பா்சனல் அதிகாரி எஸ். வெங்கட்ராமன் திங்கள்கிழமை (பிப். 24) உத்தரவிட்டுள்ளாா். இதனால், விரைவில் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என தெரிகிறது.
இதுகுறித்து, பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்க நிா்வாகிகள் கூறியது:
39 ஊழியா்களை பணியமா்த்தி தெற்கு ரயில்வே அதிகாரி எஸ்.வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம். அடுத்து, காரைக்குடி-திருவாரூா் தடத்தில் தேவைப்படும் இதர அலுவலா்கள் மற்றும் பணியாளா்களையும் உடனடியாக நியமனம் செய்து, காரைக்குடி- சென்னை, ராமேசுவரம்- சென்னை மற்றும் அந்தியோதயா, கொல்லம்- வேளாங்கண்ணி விரைவு ரயில்களையும், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூா், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக மதுரைக்கு பயணிகள் ரயில்களையும் இயக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.