.

Pages

Sunday, February 23, 2020

பிலால் நகரில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை சி.வி சேகர் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!

அதிராம்பட்டினம், பிப்.23
அதிராம்பட்டினம், பிலால் நகரில் ரூ.17.11 லட்சத்தில், புதிய தார்சாலை அமைக்கும் பணியை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர்  சனிக்கிழமை காலை தொடங்கி வைத்தார்.

ஏரிப்புறக்கரை ஊராட்சி, பிலால் நகரில் சாலைகள் மற்றும் வடிகால் வசதி அமைத்து தரக்கோரி, அப்பகுதி ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகரிடம் மனு அளித்து இருந்தனர். இந்நிலையில், பிலால் நகரில் 2 தார் சாலைகள், முறையே ரூ.8.87, ரூ.8.24 லட்சங்களில், 350, 325 மீட்டர் நீளங்களில் அமைத்திட, எஸ்.சி.பி.ஏ.ஆர் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி பெறப்பட்டது.

இந்நிலையில், பிலால் நகரில் இதன் பணியை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.சி சேகர் சனிக்கிழமை காலை தொடங்கி வைத்தார்.

அப்போது, சி.வி சேகர் எம்.எல்.ஏ., க்கு பிலால் நகர் ஜமாத் நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். மேலும், பிலால் நகரில் புதிதாக ரேஷன் கடை அமைப்பதற்கும், மழை காலங்களில் வெள்ளத்தில் மிதக்கும் பிலால் நகரில், செடியன் குளம் தென்கரை முதல் ஈஸ்ட்கோஸ்ட் சாலை வரை புதிதாக மழைநீர்-கழிவு நீர் வடிகால் வாய்க்கால் அமைப்பதற்கு, எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டத்தில், ரூ.26 லட்சம் மதிப்பிலான பணியினை தாமதமின்றி தொடங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட சி.வி சேகர் எம்.எல்.ஏ, கோரிக்கை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினார். மேலும், பிலால் நகர், எம்.எஸ்.எம் நகர் பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு படும் சிரமத்தை கருத்தில் கொண்டு, இப்பகுதிகளிலேயே ரேஷன் பொருட்கள் பெறுகின்ற வகையில், மொபைல் ஷாப் தொடங்குவதற்கு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். விரைவில், இக்கோரிக்கை  நிறைவேறும்' என்றார்.

அப்போது, பட்டுக்கோட்டை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சுப.ராஜேந்திரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் பி.சுப்பிரமணியன், தஞ்சை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பாலு, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் நா.சுரேஷ், ஏரிப்புறக்கரை ஊராட்சித் தலைவர் எஸ்.சக்திவேல், மீனவ சங்கத் தலைவர்  வி.முருகேசன், பிலால் நகர் வார்டு கவுன்சிலர் எம்.ஆர் கமாலுதீன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.