.

Pages

Saturday, February 15, 2020

CAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் நடந்த பிரமாண்ட எழுச்சி மாநாட்டில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.14
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரி கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் (14-02-2020) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கலந்துகொண்டு பேசிய கண்டன உரையில்;
இந்த 11 பேர் மட்டும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருந்திருந்தால் இந்த சட்டத்திருத்தமே வந்திருக்காது. முதன் முதலாக குடியுரிமை சட்டம் வருகிறபோது அதற்கான விவாதத்தை நாடு முழுவதும் இருக்கக்கூடிய மாநில சட்டமன்றங்களில் விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு பின்னர் தான் இந்த சட்டத்திருத்தமே வருகிறது.

மாநில சட்டமன்றங்களில், பொதுவெளியில் இதற்கான விவாதங்கள் இல்லையென்றால் இது ஜனநாயக நாடா? எப்படி இந்த சட்டத்தை கொண்டு வரமுடியும், சட்டத்திற்கு முரணாக இல்லையா? டெல்லியில் இருக்கிற இந்தியா கேட்டில், இந்தியாவின் சுதந்திரத்திற்காக தங்களை அழித்துக்கொண்ட தியாகிகள் 95 ஆயிரம் பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது அதில், 61 ஆயிரம் பேர் முஸ்லீம்கள்.

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) சட்டம் வந்த பிறகு 19 லட்சம் பேர் குடியுரிமையை இழந்து அசாம் மாநிலத்தில் உள்ளனர். இதில், 6 லட்சம் பேர் மட்டும்தான் முஸ்லீம்கள், எஞ்சிய 13 லட்சம் பேர் இந்துக்கள். எனவே, இந்த
சட்டத்தால் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் மட்டுமல்ல இந்துக்களும் தான்' என்றார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா கலந்துகொண்டு பேசிய கண்டன உரையில்;
'தமிழ்நாட்டில் இந்துக்களும், முஸ்லீம்களுக்கும் பிரித்து பார்க்கின்ற பேதம் இந்த மண்ணிற்கு கிடையாது. ஒரு சமூகத்தோடு மற்றொரு சமூகத்தவர் மாமன், மச்சான் என்று உறவு கொண்டாடுவது, சித்தப்பு என்று சொல்வது, மாமு என்று அழைத்துக்கொள்வது இந்த நாட்டினரின் இயல்பான பழக்கம். மனிதனை உருவாக்குவதில் மதத்திற்கான பங்கு மிகப்பெரியளவில் உள்ளது. எப்படி பெற்றோர் ஒரு பங்கு, கல்வி ஒரு பங்கோ. அதுபோல் மதம் ஒரு பங்கு. என்னுடைய மதம் சிறந்தது. உன்னுடைய மதம் மோசமானது என்கின்ற போக்கு ஏற்பட்ட பிறகுதான் மோதல் ஏற்பட்டது' என்றார்.

தமுமுக மாநில துணைத்தலைவர் கோவை செய்யது கலந்துகொண்டு பேசிய கண்டன உரையில்;
இந்திய சேதத்தினுடைய முஸ்லீம்களை சன்னம், சன்னமாக அப்புறப்படுத்துவதற்கான சதிக்கூட்டத்தின் ஒரு பகுதி தான் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ). அதன் அடுத்தப் பகுதி தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்), அடுத்தது. தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) அவர்கள் அமல்படுத்த துடிப்பது அதுதான். இந்திய தேசத்தின் விடுதலைக்கு வித்திட்டவர்கள் முஸ்லீம்கள். என்றார்.

வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு பேசிய கண்டன உரையில்;
குடியுரிமை சட்டம் 1955 ல் இயற்றப்பட்டது. இந்த சட்டம் ஆறு முறை திருத்தப்பட்டது. 5 முறை கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை எதிர்த்து போராடாதவர்கள் இப்போது தெருவில் வந்துநின்று போராடுவதன் நோக்கம் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவன் இந்த சட்டத்தின் மூலம் இந்தியாவுக்குள் வரக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளதால் தான் இந்த சட்டம் எதிர்க்கப்படுகிறது.

இந்தியா ஒரு அரசியலமைப்பு சார்ந்த நாடு. இந்த நாட்டில் வடிவமைக்கக்கூடிய சட்டங்கள் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இப்படி ஒரு மதத்தை குறிப்பிட்டு அந்த மதத்தை சார்ந்தவர்கள் இந்தியாவிற்குள் வரக்கூடாது என்று இந்தியாவில் சட்டம் இயற்ற முடியாது.

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஒரு சட்டத்தை கூட இந்தியாவில் இயற்ற முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. இந்த நாடு மதச்சார்பற்ற நாடு என்று. இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் வரக்கூடாது என்று இப்படி ஒரு  குடியுரிமை திருத்த சட்டத்தை இந்தியாவில் இயற்றினால் அது செல்லுமா? செல்லாதா? என்றார்.

முன்னதாக, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி. எம்.ஜி சபியுல்லா அன்வாரி தொடக்க உரை நிகழ்த்தினார்.
கூட்டத்திற்கு, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஏ.அப்துல் ரெஜாக் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் அனைத்து சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியினை, ஏ.முகமது ஹஸனார் தொகுத்தளித்தார். நிறைவில், அண்ணா சிங்காரவேலு நன்றி கூறினார். கூட்ட ஏற்பாட்டினை கடற்கரைத்தெரு மஹல்லாவாசிகள் செய்திருந்தனர்.

கூட்டத்தில், சி.எப்.ஐ விதைகள் கலைக்குழுவினர், ஊர் பிரமுகர்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் தங்களது செல்லிடப்பேசியில் விளக்கு எரியவிட்டபடி முழக்கமிட்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.