.

Pages

Thursday, February 20, 2020

அதிராம்பட்டினம் தொடர் போராட்டம் ~ 2-வது நாள் UPDATES (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.20
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புக்குழு சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரியும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆர்) நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் இன்று (20-02-2020) வியாழக்கிழமை 2-வது நாளாக இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றி வருகின்றனர். இந்த போராட்டத்தில், பெண்கள், குழந்தைகள் உட்பட திரளானோர் பங்கேற்று, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டு வருகின்றனர்.

CAA, NRC, NPR க்கு எதிராக தொடர் போராட்டத்தின் இன்றைய (20-02-2020) UPDATES:

பிற்பகல்: 12:30 PM  இடைவேளை (லுஹர் தொழுகை)
முற்பகல்: 12:00 PM குளிர்பானம் வழங்கல்
முற்பகல் 11:30 AM சி.பக்கரி சாமி (கண்டன உரை, இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்)
காலை 11:15 AM CAA, NRC, NPR க்கு எதிராக கண்டன முழக்கங்கள்
காலை  11:00 AM எம்.எம்.எஸ் அப்துல் கரீம் (கண்டன உரை, திமுக, அதிரை பேரூர்)
காலை 10:45 AM இராம.குணசேகரன் (கண்டன உரை, திமுக அதிரை பேரூர் செயலாளர்)
காலை 10:30 AM சி.தில்லை நாதன் (கண்டன உரை, திமுக அதிரை பேரூர் இணைச்செயலாளர்)
காலை 10:30 AM - போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதிராம்பட்டினம் பேரூர் திமுகவினர் பங்கேற்பு
காலை - 10 AM CAA, NRC, NPR க்கு எதிராக கண்டன முழக்கங்கள்
காலை 8:00 ~10:00 AM இடைவேளை (பள்ளி செல்லும் மாணவர்களுக்காக)
அதிகாலை 6:45 AM இடைவேளை (ஜாவியா திக்ரூ மஜ்லீஸ்)
அதிகாலை 6:40 AM  குடிநீர் - தேநீர் - பிஸ்கட், ரொட்டி வழங்கல்
அதிகாலை 6:30 AM ஏ. முகமது அஸனார் (கண்டன உரை)
அதிகாலை 6:00 AM மவ்லவி நவாஸ் (கண்டன உரை)
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.