.

Pages

Wednesday, February 19, 2020

அரிமா சங்கம் சார்பில் ஷிஃபா மருத்துவமனையில் 714 பேருக்கு கண் பரிசோதனை ~ 84 பேருக்கு IOL சிகிச்சை (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல்  தலைமை வகித்தார். லயன்ஸ் சங்கச் செயலர் எம். நிஜாமுதீன், பொருளாளர் எஸ். எம் முகமது முகைதீன், அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் முகமது இம்தியாஸ், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கினைப்பாளர் எஸ்.செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் 714 பேருக்கு சோதனை செய்ததில் 84 பேருக்கு கண்புரை நோய் இருப்பது கண்டறியப்பட்டு, IOL அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மலிவு விலையில் 110 பேருக்கு மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது. முகாம் காலை 8 மணிக்கு தொடங்கி  மாலை 5 மணி வரை நடந்தது.  முகாமில், அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை செவிலியர்கள், தன்னார்வலர்கள் முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்தனர்.

முகாமில், பேராசிரியர் எஸ்.பி கணபதி, பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், எஸ்.ஏ அப்துல் ஹமீது, பேராசிரியர் கே. முருகானந்தம், எம். அப்துல் ரஹ்மான், எம். முகமது அபூபக்கர், என். உதயகுமார், முல்லை ஆர். மதி, என்.யூ ராமமூர்த்தி, அபுல் ஹசன் சாதலி, எம்.அகமது கபீர், எம்.கே.எம் முகமது அபூபக்கர், வரிசை முகமது உள்ளிட்ட லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 
 


 
  
 
 
 
 
 
 
 

 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.