.

Pages

Saturday, February 1, 2020

CAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரமாண்ட கண்டனப் பொதுக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.01
அதிராம்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரி கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் பழைய அஞ்சலக அலுவலக சாலையில் (31-01-2020) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், சிறப்பு விருந்தினர்களாக நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலப் பொதுச்செயலாளருமாகிய எம். தமீமுன் அன்சாரி, மே.17 இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மவ்லவி. ஹுசைன் மன்பஈ, ஏ.ஜெ ஜியாவுதீன், புருசோத்தமன், மவ்லவி முகவை இம்ரான் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

கூட்டத்திற்கு, எம்.எம் இப்ராஹீம், எம்.இசட் பசீர் அகமது ஆகியோர் தலைமை வகித்தனர். ஹஸனார் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியினை, அதிரை மைதீன் தொகுத்தளித்தார். நிறைவில், ஏ.பைசல் அகமது நன்றி கூறினார்.

கூட்டத்தில், பெண்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.