அதிராம்பட்டினம், பிப்.22
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தொடா் போராட்டம் கடந்த (பிப்.19) புதன்கிழமை மாலை அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் தொடங்கி, சனிக்கிழமை 4-வது நாளாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஜமாத் மற்றும் கிராம பஞ்சாயத் நிர்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், CAA, NRC, NPR ஆகியவற்றிற்கு எதிராக அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில், சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், இளைஞர்கள் சங்க நிர்வாகிகள், மஹல்லாவாசிகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டனப்பேரணி இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
பேரணி சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்திலிருந்து புறப்பட்டு, செக்கடித்தெரு, சேர்மன் வாடி, ஆஸ்பத்திரி சாலை, பழைய போஸ்ட் ஆபிஸ் சாலை, கடைத்தெரு வழியாக அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் நடைபெறும் தொடர் போராட்டக் களத்தில் நிறைவடைந்தது.
இதில், இந்திய தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு, மத்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீா்மானம் நிறைவேற்றி, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆா்) ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தொடா் போராட்டம் கடந்த (பிப்.19) புதன்கிழமை மாலை அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் தொடங்கி, சனிக்கிழமை 4-வது நாளாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஜமாத் மற்றும் கிராம பஞ்சாயத் நிர்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், CAA, NRC, NPR ஆகியவற்றிற்கு எதிராக அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில், சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், இளைஞர்கள் சங்க நிர்வாகிகள், மஹல்லாவாசிகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டனப்பேரணி இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
பேரணி சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்திலிருந்து புறப்பட்டு, செக்கடித்தெரு, சேர்மன் வாடி, ஆஸ்பத்திரி சாலை, பழைய போஸ்ட் ஆபிஸ் சாலை, கடைத்தெரு வழியாக அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் நடைபெறும் தொடர் போராட்டக் களத்தில் நிறைவடைந்தது.
இதில், இந்திய தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு, மத்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீா்மானம் நிறைவேற்றி, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆா்) ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.