அதிராம்பட்டினம், பிப்.21
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு குழு சார்பில், தொடா் போராட்டம் கடந்த புதன்கிழமை மாலை அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் தொடங்கினா். 3-வது நாளாக இந்தப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு பெண்கள் உட்பட ஒட்டுமொத்த கிராமவாசிகளும், பஞ்சாயத் தலைவர் ஜெயமுருகன் தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை காலை போராட்ட களத்தில் பங்கேற்றனர். இதில், சி.தில்லைநாதன், புருசோத்தமன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் 'சி.ஏ.ஏ வை திரும்பப்பெறு', 'என்.ஆர்.சி ஐ புறக்கணி' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீா்மானம் நிறைவேற்றி, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆா்) ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
முன்னதாக, அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு கிராமவாசிகள் அனைவரையும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு குழுவினர் வரவேற்றனர்.
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு குழு சார்பில், தொடா் போராட்டம் கடந்த புதன்கிழமை மாலை அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் தொடங்கினா். 3-வது நாளாக இந்தப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு பெண்கள் உட்பட ஒட்டுமொத்த கிராமவாசிகளும், பஞ்சாயத் தலைவர் ஜெயமுருகன் தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை காலை போராட்ட களத்தில் பங்கேற்றனர். இதில், சி.தில்லைநாதன், புருசோத்தமன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் 'சி.ஏ.ஏ வை திரும்பப்பெறு', 'என்.ஆர்.சி ஐ புறக்கணி' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீா்மானம் நிறைவேற்றி, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆா்) ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
முன்னதாக, அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு கிராமவாசிகள் அனைவரையும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு குழுவினர் வரவேற்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.