அதிராம்பட்டினம், பிப்.18
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், அதிராம்பட்டினம் ஜாவியா வளாகத்தில் இன்று (18-02-2020) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் தலைமை வகித்தார். அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை, ஹாஜி எஸ்.எம்.ஏ அகமது கபீர் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில், ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகள், கட்சிகள் சார்பில், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆர்) நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (19-02-2020) புதன்கிழமை காலை நடைபெற உள்ள மாவட்ட ஆட்சியரக முற்றுகை போராட்டத்தில், அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பில், திரளானோர் பங்கேற்பது எனவும், போராட்டக் களத்திற்கு பயணிக்க முதல்கட்டமாக 10 வேன் வாகனங்களுக்கு ஏற்பாடு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பின் பேரில் ஜாவியா நிர்வாகக் கமிட்டித் தலைவர் எம்.பி அபூபக்கர், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் பி.எம்.கே தாஜுதீன், எஸ்.எம். முகமது முகைதீன், ஏ.தாஜுதீன், ஜபருல்லாஹ், ஏ.அப்துல் ரெஜாக், பி.எம்.எஸ் அமீன், டி.அகமது அனஸ், இ.வாப்பு மரைக்காயர், பி.ஜமாலுதீன், அகமது அனஸ், எம்.அப்துல் ஜலீல், எம்.நிஜாமுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், அதிராம்பட்டினம் ஜாவியா வளாகத்தில் இன்று (18-02-2020) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் தலைமை வகித்தார். அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை, ஹாஜி எஸ்.எம்.ஏ அகமது கபீர் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில், ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகள், கட்சிகள் சார்பில், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆர்) நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (19-02-2020) புதன்கிழமை காலை நடைபெற உள்ள மாவட்ட ஆட்சியரக முற்றுகை போராட்டத்தில், அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பில், திரளானோர் பங்கேற்பது எனவும், போராட்டக் களத்திற்கு பயணிக்க முதல்கட்டமாக 10 வேன் வாகனங்களுக்கு ஏற்பாடு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பின் பேரில் ஜாவியா நிர்வாகக் கமிட்டித் தலைவர் எம்.பி அபூபக்கர், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் பி.எம்.கே தாஜுதீன், எஸ்.எம். முகமது முகைதீன், ஏ.தாஜுதீன், ஜபருல்லாஹ், ஏ.அப்துல் ரெஜாக், பி.எம்.எஸ் அமீன், டி.அகமது அனஸ், இ.வாப்பு மரைக்காயர், பி.ஜமாலுதீன், அகமது அனஸ், எம்.அப்துல் ஜலீல், எம்.நிஜாமுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.