முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து இருக்கும் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் புதுத்தெரு திடலில் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் கடந்த 4 நாட்களாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் அதிகமாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று (18-02-2020) 4- வது நாள் போராட்டத்தில் சிறை கம்பி கூண்டு போல அமைத்து அதற்குள் கைதிகளாக இளைஞர்கள் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். மாலை நேரங்களில் மாணவர்கள் போராட்ட களத்திற்கு வருகை தந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
படங்கள்: முத்துப்பேட்டை சுல்தான் இப்ராஹீம்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.