.

Pages

Sunday, February 2, 2020

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுகவினர் பங்கேற்பு (படங்கள்)

பட்டுக்கோட்டை, பிப்.02
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்ப பெறவும், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் பிப்.2 முதல் 8-ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 24-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி இன்று (02-02-2020) ஞாயிற்றுக்கிழமை காலை திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலடிக்கு மூளையில் கையெழுத்து இயக்கத்தை முன்னாள் எம்.எல்.ஏ க்கள் ஏனாதி பாலு, கா அண்ணாதுரை ஆகியோர் தொடங்கி வைத்துப்பேசினர்.

திமுக பட்டுக்கோட்டை (மேற்கு) ஒன்றியச் செயலாளர் பா. இராமநாதன் தலைமை வகித்தார். திமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சி. பக்கிரிசாமி, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தலைவர் தி.பழனிவேல் ஆகியோர் பங்கேற்று குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிப்பேசினர். இந்நிகழ்வில், எஸ்.எச் அஸ்லம் தலைமையில் 80 க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து கையெழுத்து பெறுவதற்காக உருவாக்கப்பட்ட படிவத்தில் அதிராம்பட்டினம் பேரூர் பகுதி மக்களிடம் வீடு வீடாகச் சென்று கையெழுத்து பெற்றனர். மேலும், குடியுரிமைச் சட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.