.

Pages

Saturday, February 29, 2020

அதிராம்பட்டினம் அருகே காரில் கடத்தப்பட்ட 6 மூட்டை கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது!

அதிராம்பட்டினம், பிப்.29
பட்டுக்கோட்டை வட்டம்,  தம்பிக்கோட்டை மறவக்காடு பாட்டுவனாட்சியார் பாலம் அருகே அதிராம்பட்டினம் போலீஸார் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அந்த காரில் 6 மூட்டைகளில் 220 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகளையும், அதை கடத்தப் பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக காரில் இருந்த மறவக்காடு கே.வெங்கட்ராமன் (48), தம்பிக்கோட்டை முருகேசன் (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் கஞ்சா கடத்தல் சம்பவத்தில் மறவக்காடு குமார், பட்டுக்கோட்டை ஆர்.வி.நகரைச் சேர்ந்த அய்யம்பெருமாள் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மறவக்காடு குமார் (38) சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். தலைமறைவான அய்யம்பெருமாளை போலீஸார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.