.

Pages

Wednesday, February 26, 2020

அதிராம்பட்டினம் தொடர் போராட்டத்தில் அனைத்து சமூகத்தினர் பங்கேற்க வேண்டும்: திமுக அதிரை பேரூர் கூட்டத்தில் தீர்மானம்!

அதிராம்பட்டினம், பிப்.26
திமுக அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் - உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம், அக்கட்சியின் அண்ணா படிப்பகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் அவைத்தலைவர் ஜெ.ஜெ. சாகுல் ஹமீது தலைமை வகித்தார். பொருளாளர் எஸ்.பி கோடி முதலி, எம்.எம்.எஸ் அப்துல் கரீம், எஸ்.இன்பநாதன், டி.சபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். கூட்டத்தில், எதிர்வரும் (01-03-2020) அன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடுவது, இரத்த தானம் முகாம் நடத்துவது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, அதிராம்பட்டினத்தில் நடந்து வரும் தொடர் போராட்டத்தில் அனைத்து சமூகத்தினர் தினந்தோறும் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், எஸ்.சாதிக் அலி, செங்கம்மாள் ஆகியோரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் வரவேற்றுப் பேசினார். நிறைவில், கோடி. நாகராஜ் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில், எம்.பகுருதீன், கே.இத்ரீஸ் அகமது, முல்லை மதி, முன்னாள் கவுன்சிலர்கள் எச்.முகமது இப்ராஹீம், எஸ்.எம்.ஜி பசூல்கான், எம்.முகமது சரீப், என்.எம் செய்யது முகமது, அய்யாவு, முத்து ராமன், அதிரை மைதீன், நூவண்ணா எம்.நூர் முகமது, நூர் முகமது, இளங்கோ, வீரசேகரன், வரிசை முகமது, கதிரவன், அப்துல் அஜீஸ், இ.வாப்பு மரைக்காயர், அஸ்ரப், நெய்னா முகமது, முகமது ராவூத்தர், எம். அன்வர், குலாப்ஜாமூன் அன்சாரி, எம். செல்வராஜ், என்.ஆனந்தன், ஏ.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.