அதிராம்பட்டினம், பிப்.15
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம்.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார்.
முகாம் கடந்த பிப்.15ந் தேதி தொடங்கி ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மாளியக்காடு, சேண்டாக்கோட்டை ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. இதில், பள்ளி மற்றும் வழிபாட்டுத் தளங்களின் வளாகத்தை சுத்தம் செய்தல், தூய்மை விழிப்புணா்வு பிரசாரம், பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள், சுற்றுச் சூழல் விழிப்புணா்வு, மரம் வளா்த்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
முகாம் ஏற்பாட்டினை, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் ஜெ.முகமது அலி, ஏ.அப்ரூஸ் பானு, டி.கோபால கிருஷ்ணன், ஜெ.சாஜித் இக்பால் ஆகியோர் செய்திருந்தனர். முகாமில், கல்லூரிப் பேராசிரியர்கள், கிராம மக்கள், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம்.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார்.
முகாம் கடந்த பிப்.15ந் தேதி தொடங்கி ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மாளியக்காடு, சேண்டாக்கோட்டை ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. இதில், பள்ளி மற்றும் வழிபாட்டுத் தளங்களின் வளாகத்தை சுத்தம் செய்தல், தூய்மை விழிப்புணா்வு பிரசாரம், பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள், சுற்றுச் சூழல் விழிப்புணா்வு, மரம் வளா்த்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
முகாம் ஏற்பாட்டினை, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் ஜெ.முகமது அலி, ஏ.அப்ரூஸ் பானு, டி.கோபால கிருஷ்ணன், ஜெ.சாஜித் இக்பால் ஆகியோர் செய்திருந்தனர். முகாமில், கல்லூரிப் பேராசிரியர்கள், கிராம மக்கள், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.