அதிராம்பட்டினம், பிப்.28
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, அதிராம்பட்டினம் மேலத்தெரு, கீழத்தெரு, பெரிய நெசவுத்தெரு, தரகர் தெரு (ஆஷாத் நகர்) ஆகிய பகுதி பொதுமக்கள் சார்பில், பிரமாண்ட எழுச்சிப் பேரணி, அதிராம்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் 10-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஜமாத் மற்றும் கிராம பஞ்சாயத் நிர்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக, அதிராம்பட்டினம் அதிராம்பட்டினம் மேலத்தெரு, கீழத்தெரு, பெரிய நெசவுத்தெரு, தரகர் தெரு (ஆஷாத் நகர்) ஆகிய பகுதி பொதுமக்கள் சார்பில், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் இந்திய தேசியக்கொடிகளை கையில் ஏந்தியவாறு, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீா்மானம் நிறைவேற்றி, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆா்) ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி சென்றனர்.
அதிராம்பட்டினம் மேலத்தெரு, கீழத்தெரு, பெரிய நெசவுத்தெரு, தரகர் தெரு (ஆஷாத் நகர்) ஆகிய பகுதிகளில் தொடங்கியப் பேரணி பேருந்து நிலையம், பழைய அஞ்சலக சாலை, கடைத்தெரு வழியாக அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் நடைபெறும் தொடர் போராட்டக் களத்தில் நிறைவடைந்தது.
இதுகுறித்து பேரணியில் பங்கேற்ற தீனுன் நிஷா கூறியது;
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்ற திரும்ப பெற வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் 10-வது நாளாக இன்று (பிப்.28) வெள்ளிக்கிழமை போராட்டம் தொடர்கிறது. இதில்,பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்று வருகிறார்கள். இந்த சட்டம் திரும்ப பெரும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த வழக்குரைஞர் இசட். முகமது தம்பி கூறியது;
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். இதுவரையில், மத்திய அரசோ, மாநில அரசோ தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக, மக்களாகிய நாங்கள் இந்த கொடூர சட்டம் திரும்பப் பெரும் வரை எங்களது போராட்டம் தொடரும். 10-வது நாளான இன்று (பிப்.28) அதிராம்பட்டினத்தின் பல்வேறுப் பகுதிகளிலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பேரணியாகப் புறப்பட்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நடந்த போராட்டத்தின் இடையே வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் காரர்களை கண்டிப்பதோடு, வன்முறையில் பலியான 38 குடும்பங்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதை கோரிக்கையாகப் பதிவு செய்கிறோம் என்றார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, அதிராம்பட்டினம் மேலத்தெரு, கீழத்தெரு, பெரிய நெசவுத்தெரு, தரகர் தெரு (ஆஷாத் நகர்) ஆகிய பகுதி பொதுமக்கள் சார்பில், பிரமாண்ட எழுச்சிப் பேரணி, அதிராம்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் 10-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஜமாத் மற்றும் கிராம பஞ்சாயத் நிர்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக, அதிராம்பட்டினம் அதிராம்பட்டினம் மேலத்தெரு, கீழத்தெரு, பெரிய நெசவுத்தெரு, தரகர் தெரு (ஆஷாத் நகர்) ஆகிய பகுதி பொதுமக்கள் சார்பில், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் இந்திய தேசியக்கொடிகளை கையில் ஏந்தியவாறு, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீா்மானம் நிறைவேற்றி, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆா்) ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி சென்றனர்.
அதிராம்பட்டினம் மேலத்தெரு, கீழத்தெரு, பெரிய நெசவுத்தெரு, தரகர் தெரு (ஆஷாத் நகர்) ஆகிய பகுதிகளில் தொடங்கியப் பேரணி பேருந்து நிலையம், பழைய அஞ்சலக சாலை, கடைத்தெரு வழியாக அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் நடைபெறும் தொடர் போராட்டக் களத்தில் நிறைவடைந்தது.
இதுகுறித்து பேரணியில் பங்கேற்ற தீனுன் நிஷா கூறியது;
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்ற திரும்ப பெற வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் 10-வது நாளாக இன்று (பிப்.28) வெள்ளிக்கிழமை போராட்டம் தொடர்கிறது. இதில்,பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்று வருகிறார்கள். இந்த சட்டம் திரும்ப பெரும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த வழக்குரைஞர் இசட். முகமது தம்பி கூறியது;
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். இதுவரையில், மத்திய அரசோ, மாநில அரசோ தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக, மக்களாகிய நாங்கள் இந்த கொடூர சட்டம் திரும்பப் பெரும் வரை எங்களது போராட்டம் தொடரும். 10-வது நாளான இன்று (பிப்.28) அதிராம்பட்டினத்தின் பல்வேறுப் பகுதிகளிலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பேரணியாகப் புறப்பட்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நடந்த போராட்டத்தின் இடையே வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் காரர்களை கண்டிப்பதோடு, வன்முறையில் பலியான 38 குடும்பங்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதை கோரிக்கையாகப் பதிவு செய்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.