.

Pages

Thursday, February 20, 2020

CAA,NPR,NRC க்கு எதிராக அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பிரமாண்ட கண்டனப் பொதுக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.20
நாம் மனிதர் கட்சி சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் (20-02-2020) வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.ஏ சரபுதீன் தலைமை வகித்தார்.

அக்கட்சியின் நிறுவனத்தலைவர் இறைஉதவி என்கிற எஸ்.தவ்பீக், தமிழக மக்கள் விடுதலை இயக்க மாநில பொதுச்செயலாளர் தங்க குமரவேல்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்குரைஞர் பிரிவின் மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் கு.நெப்போலியன், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் வழக்குரைஞர் சே.பசும்பொன் பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைத்தலைவர் மவ்லவி வழக்குரைஞர் எச். அலீம் அல் புஹாரி, அய்யா தர்மயுக வழிப்பேரவை நிறுவனத்தலைவர் அய்யா வழி பி.பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

கூட்டத்தில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெறவேண்டும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆர்) நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெண்கள் உட்பட திரளானோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.