.

Pages

Monday, February 24, 2020

காதிர் முகைதீன் கல்லூரி வணிகவியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடக்க விழா உரை நிகழ்த்தினார். கல்லூரி துணை முதல்வர் எம்.முகமது முகைதீன் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார்.

கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.கணபதி, கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ஏ.செய்யது முகமது கனி, பி.சிலார் முகமது, எம். நாசர், ஏ.பீர் முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில், கடந்த 40 ஆண்டுகளில் வணிகவியல் துறையில் கல்வி பயின்ற 150 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு, கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சி பொங்க பகிர்ந்துகொண்டனர். நிறைவில், முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியினை, பேராசிரியர் ஏ.ஆஷிக் இக்பால் தொகுத்தளித்தார். நிறைவில், பேராசிரியர் ஏ.ஜியாவுதீன் நன்றி கூறினார். இவ்விழாவில்,  கல்லூரிப் பேராசிரியர்கள் ஜெ. முகமது அலி, எம். முகமது மாஜித், எச். சுலைமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.