பேராவூரணி, பிப்.24-
சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பேராவூரணி அண்ணா சிலை 1000 க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதையடுத்து அவர்களுடன் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் சுப்பிரமணியன், செங்கமலக்கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிஎன்டிஜே மாவட்டத் தலைவர் அதிரை ராஜிக் தலைமை வகித்தார். மாநிலப் பேச்சாளர் நுஹ்மான் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், " மத்திய பாஜக அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருகிறது. மாநில அரசு இவற்றிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால், அவர் இதுகுறித்து சட்டமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். தனது கட்சித் தலைமையிலும் வலியுறுத்த வேண்டும். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தால், அவருக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம்" என்றார். நிறைவாக மாவட்டப் பொருளாளர் அஷ்ரப் அலி நன்றி கூறினார்.
முன்னதாக, 500 பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேசியக் கொடியை ஏந்தியவாறு, அண்ணா சிலை அருகே வந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பேராவூரணி அண்ணா சிலை 1000 க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதையடுத்து அவர்களுடன் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் சுப்பிரமணியன், செங்கமலக்கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிஎன்டிஜே மாவட்டத் தலைவர் அதிரை ராஜிக் தலைமை வகித்தார். மாநிலப் பேச்சாளர் நுஹ்மான் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், " மத்திய பாஜக அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருகிறது. மாநில அரசு இவற்றிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால், அவர் இதுகுறித்து சட்டமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். தனது கட்சித் தலைமையிலும் வலியுறுத்த வேண்டும். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தால், அவருக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம்" என்றார். நிறைவாக மாவட்டப் பொருளாளர் அஷ்ரப் அலி நன்றி கூறினார்.
முன்னதாக, 500 பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேசியக் கொடியை ஏந்தியவாறு, அண்ணா சிலை அருகே வந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.