அதிராம்பட்டினம், பிப்.16
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது நடத்திய தடியடியைக் கண்டித்தும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் முகமது சேக் ராவுத்தர் தலைமை வகித்தார். தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஏ.ஆர் சாதிக் பாட்சா, முகமது தமீம், அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழுத் தலைவர் நெய்னா முகமது, உறுப்பினர்கள் எச்.செய்யது புஹாரி, முகமது யூசுப், எம்.நசுருதீன் சாலிகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஜைனுல் ஆப்தீன் கண்டன உரை நிகழ்த்தினார்.
முன்னதாக, அதிராம்பட்டினம் தக்வா பள்ளி முக்கத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக 'சி.ஏ.ஏ வை திரும்பப்பெறு', 'என்.ஆர்.சி ஐ புறக்கணி' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக புறப்பட்டுச்சென்று பேருந்து நிலையம் வந்தனர். இதில், இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டு சென்றனர்.
பின்னர் பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது நடத்திய தடியடியைக் கண்டித்தும், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரியும் முழக்கமிட்டனர். நிறைவில் நசுருதீன் நன்றி கூறினார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது நடத்திய தடியடியைக் கண்டித்தும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் முகமது சேக் ராவுத்தர் தலைமை வகித்தார். தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஏ.ஆர் சாதிக் பாட்சா, முகமது தமீம், அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழுத் தலைவர் நெய்னா முகமது, உறுப்பினர்கள் எச்.செய்யது புஹாரி, முகமது யூசுப், எம்.நசுருதீன் சாலிகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஜைனுல் ஆப்தீன் கண்டன உரை நிகழ்த்தினார்.
முன்னதாக, அதிராம்பட்டினம் தக்வா பள்ளி முக்கத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக 'சி.ஏ.ஏ வை திரும்பப்பெறு', 'என்.ஆர்.சி ஐ புறக்கணி' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக புறப்பட்டுச்சென்று பேருந்து நிலையம் வந்தனர். இதில், இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டு சென்றனர்.
பின்னர் பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது நடத்திய தடியடியைக் கண்டித்தும், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரியும் முழக்கமிட்டனர். நிறைவில் நசுருதீன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.