அதிராம்பட்டினம், பிப். 22
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை சார்பில், மீன்வளர்ப்பு குறித்து பயிற்சி பட்டறை கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் மீன்வளர்ப்பு பயிற்சி பட்டறையைத் தொடங்கி வைத்துப் பேசினார். சிறப்பு விருந்தினராக மீன் வளர்ப்பு ஆலோசகர் பட்டுக்கோட்டை கே. காளிதாசன் கலந்துகொண்டு, நவீன முறையில் மீன், இறால் வளர்ப்பு பற்றி விளக்கிப்பேசினார். பேராசிரியர் பி. குமாரசாமி பல்வேறு வகையான மீன்கள் வளர்ப்பு முறை பற்றி எடுத்துரைத்தார்.
கல்லூரி துணை முதல்வர்கள் பேராசிரியர் எம். முகமது முகைதீன், பேராசிரியர் பி.கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக, கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஏ. அம்சத் வரவேற்றுப் பேசினார். முடிவில், மீன் வளர்ப்பு பயிற்சி பட்டறை அமைப்பு செயலாளர் பேராசிரியர் கே.முத்துக்குமரவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை பேராசிரியை வி. கானப்ரியா தொகுத்தளித்தார்.
விழாவில், என்.கருப்பையா, எஸ்.ராஜேந்திரன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் எஸ் ரவீந்திரன் ஓ. சாதிக், ஏ. மகாராஜன், ஜெ. சுகுமாரன், என். வசந்தி, எஸ். மல்கர் ஒளி உட்பட கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை சார்பில், மீன்வளர்ப்பு குறித்து பயிற்சி பட்டறை கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் மீன்வளர்ப்பு பயிற்சி பட்டறையைத் தொடங்கி வைத்துப் பேசினார். சிறப்பு விருந்தினராக மீன் வளர்ப்பு ஆலோசகர் பட்டுக்கோட்டை கே. காளிதாசன் கலந்துகொண்டு, நவீன முறையில் மீன், இறால் வளர்ப்பு பற்றி விளக்கிப்பேசினார். பேராசிரியர் பி. குமாரசாமி பல்வேறு வகையான மீன்கள் வளர்ப்பு முறை பற்றி எடுத்துரைத்தார்.
கல்லூரி துணை முதல்வர்கள் பேராசிரியர் எம். முகமது முகைதீன், பேராசிரியர் பி.கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக, கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஏ. அம்சத் வரவேற்றுப் பேசினார். முடிவில், மீன் வளர்ப்பு பயிற்சி பட்டறை அமைப்பு செயலாளர் பேராசிரியர் கே.முத்துக்குமரவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை பேராசிரியை வி. கானப்ரியா தொகுத்தளித்தார்.
விழாவில், என்.கருப்பையா, எஸ்.ராஜேந்திரன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் எஸ் ரவீந்திரன் ஓ. சாதிக், ஏ. மகாராஜன், ஜெ. சுகுமாரன், என். வசந்தி, எஸ். மல்கர் ஒளி உட்பட கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.