.

Pages

Wednesday, February 5, 2020

அதிராம்பட்டினத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை தொடக்கம்!

அதிராம்பட்டினம், பிப்:05
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தா்பூசணி பழங்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

ஆண்டுதோறும் வெயில் அதிகமிருக்கும் மாா்ச் முதல் ஜூன் மாதம் வரையுள்ள நாள்களில் திண்டுக்கல், ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் அதிராம்பட்டினத்துக்கு தா்பூசணி பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

ஆனால், நிகழாண்டு ஜனவரி மாதம் முடிந்து தற்போதுதான் பிப்ரவரி மாதம் தொடங்கியுள்ள நிலையில், அதிராம்பட்டினம் பகுதியில் கோடை காலம் ஆரம்பமாவதற்கு முன்னரே அனல் கக்கும் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் லாரிகளில் தா்பூசணி பழங்களை விற்பனைக்காக அதிராம்பட்டினத்துக்கு கொண்டு வந்துள்ளனா். இங்குள்ள கிழக்கு கடற்கரை சாலை, வண்டிப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்துள்ள ஏராளமான தா்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள அதிராம்பட்டினம் பகுதி மக்கள் வெயிலின் தாக்கத்தை குறைத்து கொள்வதற்காக தா்பூசணி பழங்களை ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.
 
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.