அதிராம்பட்டினம், பிப்.04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 7-வது ஆண்டு விழா பள்ளி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஏ.மலைஅய்யன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி.வி சேகர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, கல்வியில், விளையாட்டில் சாதனை நிகழ்த்திய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், கேடயப்பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் ஜெ. சுல்தானா பர்வீன், 'Lead School' எஸ்.சுமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு கல்வியின் அவசியம் குறித்து விளக்கிப்பேசினர்.
பட்டுக்கோட்டை கேரியர் பாயிண்ட் பயிற்றுநர் அக்ஷய் செளத்ரி மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான NEET / IIT-JEE தேர்வு குறித்து மாணவர்கள் - பெற்றோர்களுக்கு விளக்கிப்பேசினார்.
விழாவில், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் எஸ்.எம் முகமது முகைதீன், மருத்துவர் எம்.செல்லப்பன், பட்டுக்கோட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பி.சுப்பிரமணியன், ஆர்.எம்.எஸ் கெளதம தேவர், மனோகரன். எம்.கணேஷன், எம்.எஸ் பாலசுப்பிரமணியன், ராஜேஷ்வரி மனோகரன், கே.பழனிதுரை, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஜெயசுந்தரி வெங்கடாசலம், எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், பள்ளிக் குழந்தைகள் பங்குபெற்ற பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
முன்னதாக, பள்ளி முதல்வர் என். ரகுபதி பள்ளி ஆண்டறிக்கையை வாசித்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் நடப்பு கல்வியாண்டில் ஆற்றிய சாதனைகள் மற்றும் பள்ளியில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பட்டியலிட்டு பேசினார். விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளார் எஸ்.சுப்பையன் செய்தார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 7-வது ஆண்டு விழா பள்ளி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஏ.மலைஅய்யன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி.வி சேகர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, கல்வியில், விளையாட்டில் சாதனை நிகழ்த்திய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், கேடயப்பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் ஜெ. சுல்தானா பர்வீன், 'Lead School' எஸ்.சுமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு கல்வியின் அவசியம் குறித்து விளக்கிப்பேசினர்.
பட்டுக்கோட்டை கேரியர் பாயிண்ட் பயிற்றுநர் அக்ஷய் செளத்ரி மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான NEET / IIT-JEE தேர்வு குறித்து மாணவர்கள் - பெற்றோர்களுக்கு விளக்கிப்பேசினார்.
விழாவில், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் எஸ்.எம் முகமது முகைதீன், மருத்துவர் எம்.செல்லப்பன், பட்டுக்கோட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பி.சுப்பிரமணியன், ஆர்.எம்.எஸ் கெளதம தேவர், மனோகரன். எம்.கணேஷன், எம்.எஸ் பாலசுப்பிரமணியன், ராஜேஷ்வரி மனோகரன், கே.பழனிதுரை, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஜெயசுந்தரி வெங்கடாசலம், எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், பள்ளிக் குழந்தைகள் பங்குபெற்ற பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
முன்னதாக, பள்ளி முதல்வர் என். ரகுபதி பள்ளி ஆண்டறிக்கையை வாசித்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் நடப்பு கல்வியாண்டில் ஆற்றிய சாதனைகள் மற்றும் பள்ளியில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பட்டியலிட்டு பேசினார். விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளார் எஸ்.சுப்பையன் செய்தார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.