.

Pages

Sunday, February 2, 2020

மதுக்கூரில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.02
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடடிய டெல்லி ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமுமுக அமைப்பின் சார்பு அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கம் (எஸ்.எம்.ஐ) சார்பில் ஆர்ப்பாட்டம் மதுக்கூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, அவ்வமைப்பின் மாவட்டச் செயலாளர் முகமது இம்ரான் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மதுக்கூர் பேரூர் பொறுப்பாளர் இம்தியாஸ் வரவேற்றுப் பேசினார். தமுமுக, மமக மாவட்ட பொறுப்புக் குழுத்தலைவர் முகமது சேக் ராவுத்தர் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

பாப்புலர் ஃபரண்ட ஆஃப் இந்தியா அமைப்பின் மதுக்கூர் பேரூர் தலைவர் சேக் அஜ்மல், மமக மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் மதுக்கூர் ஃபவாஸ் ஆகியோர் சிற்றுரை நிகழ்த்தினர்.

சிறப்பு அழைப்பாளராக சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில துணைச் செயலாளர் குர்சித் அகமது கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, டெல்லி காவல்துறையை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் முழக்கமிட்டனர். நிறைவில், முஸ்தபா நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.