பசுமையை வலியுறுத்தி, அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி இகோ கிளப் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா இன்று (01-02-2020) சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் என்.உதயகுமார் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, தஞ்சாவூர் மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் எஸ்.மீனாட்சிசுந்தரம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். பின்னர், மரங்கள் வளர்ப்பு பற்றி மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்.
இதையடுத்து, பசுமையை வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் வேங்கை, புங்கை, மஹாகனி, வாகை உள்ளிட்ட 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளை பாதுகாக்க கூண்டுகள் வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.