அதிராம்பட்டினம், பிப்.07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 22-வது ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் பேரூர் மன்ற முன்னாள் துணைத்தலைவர் இராம.குணசேகரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.ஜெயபால், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக். மேல்நிலை பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில துணைச்செயலாளர் ஜி.ஆர் ஸ்ரீதர், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் எஸ்.பி கணபதி, பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டு ஆண்டு விழா உரை நிகழ்த்தினர். இதில், கல்வியின் அவசியம், அதன் பயன்பாடு குறித்தும், மாணவ, மாணவிகளின் நல்லொழுக்கம் ஆகியவை பற்றி விளக்கிப் பேசினார்.
பட்டுக்கோட்டை நியூ ஆக்ஸ்போர்டு நர்சரி பள்ளி முதல்வர் யு. அபிராமி ஆண்டறிக்கை வாசித்தார். இதில், மாணவிகள் - ஆசிரியைகள் - பள்ளி நிகழ்த்திய பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டார். மேலும், பள்ளி சார்பில் நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் பட்டியலிட்டு பேசினார்.
விழாவில் கல்வியில், விளையாட்டில் சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பல்வேறுப் பாடப்பிரிவுகளில் சாதனை நிகழ்த்திய பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
முன்னதாக, பள்ளி முதுகலை ஆசிரியர் யு.பாலாஜி வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி முதுகலை ஆசிரியை உஷா தொகுத்தளித்தார். நிறைவில், பள்ளி முதுகலை ஆசிரியை உச்சையினி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, பள்ளித் தாளாளர் என் உதயகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
விழாவில், ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஆர்.எஸ் வெங்கடாசலம், எஸ்.எஸ் ராமச்சந்திரன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் எம்.அப்துல் ஜலீல், எம்.நிஜாமுதீன், எம்.முகமது அபூபக்கர், செல்வகுமார், சிவா மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 22-வது ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் பேரூர் மன்ற முன்னாள் துணைத்தலைவர் இராம.குணசேகரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.ஜெயபால், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக். மேல்நிலை பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில துணைச்செயலாளர் ஜி.ஆர் ஸ்ரீதர், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் எஸ்.பி கணபதி, பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டு ஆண்டு விழா உரை நிகழ்த்தினர். இதில், கல்வியின் அவசியம், அதன் பயன்பாடு குறித்தும், மாணவ, மாணவிகளின் நல்லொழுக்கம் ஆகியவை பற்றி விளக்கிப் பேசினார்.
பட்டுக்கோட்டை நியூ ஆக்ஸ்போர்டு நர்சரி பள்ளி முதல்வர் யு. அபிராமி ஆண்டறிக்கை வாசித்தார். இதில், மாணவிகள் - ஆசிரியைகள் - பள்ளி நிகழ்த்திய பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டார். மேலும், பள்ளி சார்பில் நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் பட்டியலிட்டு பேசினார்.
விழாவில் கல்வியில், விளையாட்டில் சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பல்வேறுப் பாடப்பிரிவுகளில் சாதனை நிகழ்த்திய பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
முன்னதாக, பள்ளி முதுகலை ஆசிரியர் யு.பாலாஜி வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி முதுகலை ஆசிரியை உஷா தொகுத்தளித்தார். நிறைவில், பள்ளி முதுகலை ஆசிரியை உச்சையினி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, பள்ளித் தாளாளர் என் உதயகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
விழாவில், ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஆர்.எஸ் வெங்கடாசலம், எஸ்.எஸ் ராமச்சந்திரன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் எம்.அப்துல் ஜலீல், எம்.நிஜாமுதீன், எம்.முகமது அபூபக்கர், செல்வகுமார், சிவா மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.