மதுக்கூர், பிப்.15
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை, வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் முகமது சேக் ராவுத்தர் தலைமை வகித்தார். எஸ்.எம்.ஐ அமைப்பின் மாவட்டச் செயலாளர் முகமது இம்ரான் வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஜைனுல் ஆப்தீன் கண்டன உரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா மதுக்கூர் பேரூர் தலைவர் சேக் அஜ்மல் சிற்றுரை நிகழ்த்தினர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை, வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் முகமது சேக் ராவுத்தர் தலைமை வகித்தார். எஸ்.எம்.ஐ அமைப்பின் மாவட்டச் செயலாளர் முகமது இம்ரான் வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஜைனுல் ஆப்தீன் கண்டன உரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா மதுக்கூர் பேரூர் தலைவர் சேக் அஜ்மல் சிற்றுரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசையும், காவல்துறையை கண்டித்து சமூக நீதி மாணவர் அமைப்பினர் கோஷங்கள் எழுப்பினர். நிறைவில், முஸ்தபா நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட600 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.