.

Pages

Sunday, March 8, 2020

மதுக்கூர் 21-வது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம் (படங்கள்)

மதுக்கூர், மார்ச் 08
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தொடர்ந்து 21-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம், மதுக்கூர் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்றது.

இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.

21வது நாள் போராட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் அபூசுஹைல் பாகவி, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட திரளானோர் பங்கேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.