அதிராம்பட்டினம், மார்ச் 25
குரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிராம்பட்டினத்தில் இயங்கும் மருந்தகங்கள், பால், காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாகும் கடைகளின் முன்பாக சமூக இடைவெளிக் கோடுகள் இன்று புதன்கிழமை வரையப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் மருந்து கடைகள், காய்கறி கடைகள், பால் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் தொற்று பரவாமல் தடுப்பதற்கு, பொதுமக்கள் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்காக, ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு கோடுகள் வரையப்பட்டது.
இப்பணிகளை, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு தலைமையில், துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் மேற்பார்வையில், துப்புரவு பணியாளர்கள் வெள்ளை சுண்ணாம்பில் கோடு போட்டனர். மேலும், பால் கடைகளுக்கு வரும் பால் வண்டிகளுக்கு கைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளித்தனர்.
குரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிராம்பட்டினத்தில் இயங்கும் மருந்தகங்கள், பால், காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாகும் கடைகளின் முன்பாக சமூக இடைவெளிக் கோடுகள் இன்று புதன்கிழமை வரையப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் மருந்து கடைகள், காய்கறி கடைகள், பால் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் தொற்று பரவாமல் தடுப்பதற்கு, பொதுமக்கள் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்காக, ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு கோடுகள் வரையப்பட்டது.
இப்பணிகளை, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு தலைமையில், துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் மேற்பார்வையில், துப்புரவு பணியாளர்கள் வெள்ளை சுண்ணாம்பில் கோடு போட்டனர். மேலும், பால் கடைகளுக்கு வரும் பால் வண்டிகளுக்கு கைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.