.

Pages

Wednesday, March 18, 2020

மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம், சங்க வளாகத்தில் கடந்த 11-03-2020 அன்று நடைபெற்றது.

தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய தலைவராக பி.எம்.கே தாஜுதீன், துணைத்தலைவராக எம்.எம்.எஸ் முகமது இக்பால், செயலாளர்களாக எம்.காதர் முகைதீன், பி.ஜமாலுதீன், துணைச் செயலாளராக என்.சம்சுல் மன்சூர், பொருளாளர்களாக கே. தாஜுதீன் என்கிற சலீம், எஸ். பகுருதீன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், ம.செ ஜபருல்லா, கே.நஜ்முதீன், எம்.ஐ முகமது அஸ்ரப், கே.முகமது அப்துல்லா, ஏ.சகாபுதீன், வி.டி அஜ்மல்கான், எம்.எம்.எஸ் அன்வர், ஜெ.முகமது புஹாரி, ஏ.சிக்கந்தர், எஸ்.நிஜாமுதீன் ஆகிய 10 பேர் கொண்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நிர்வாகிகள் தேர்வினை ஜெ. முகமது புஹாரி, கே.ராஜிக் முகமது, எஸ்.நிஜாமுதீன் ஆகியோர் நடத்தினர்.

இந்நிலையில், புதிதாக தேர்வான நிர்வாகிகள் அனைவரும் நேற்று (17-03-2020) செவ்வாய்க்கிழமை மாலை சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் நடந்த கூட்டத்தில், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத் தலைவரும், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமாகிய ஹாஜி எம்.எம்.எஸ் சேக் நசுருதீன் மறைவுக்கு, மறுமையின் ஈடேற்றத்திற்கு துஆ செய்தவண்ணம் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிர்வாகத்தேர்வில் ஆட்சேபனை தெரிவித்து மஹல்லாவாசிகள் கே.எஸ்.எம் பகுருதீன், எம்.எம்.எஸ் முகமது இக்பால் ஆகியோரிடம் அளித்திருந்த மனு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. நிறைவில், புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட செயலாளர்கள் இருவரும் சமூக ஒற்றுமை, வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஒருவருக்கொருவர் பரஸ்பரம் இணைந்து சேவை ஆற்ற வேண்டுமென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதில், பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி செயலர் கே.எஸ்.எம். பகுருதீன், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பின் பேரில் சேக்கனா நிஜாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.