அதிராம்பட்டினம், மார்ச் 22
குரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இன்று (22-03-2020) ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளதை கருத்தில் கொண்டு, அரசு மேற்கொண்டு வரும் குரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில், அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையம், கடைத்தெரு, பழைய அஞ்சலக சாலை, கிழக்கு கடற்கரைச்சாலை, ஜாவியா சாலை, செக்கடி மேடு, சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு வர்த்தகப் பகுதிகளின் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால், அதிராம்பட்டினம் முழுவதும் பொதுமக்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்சி வாகனங்கள் இயங்கவில்லை. டீ கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகங்கள் திறந்து இருந்தன.
அரசின் சுய ஊரடங்கை ஆதரித்து, அதிராம்பட்டினம் கடைத்தெரு மற்றும் மெயின் ரோடு மீன் மார்க்கெட்களில் மீன் வியாபாரங்கள் நடக்க வில்லை. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
குரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை சுகாதாரப் பணிகளை அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிராம்பட்டினம் பேரூர் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றிவிட்டு, ஆங்காங்கே பிளீச்சிங் பவுடர் இட்டும், கிருமி நாசினி தெளித்தும் தூய்மைப்படுத்தி வருகின்றனர்.
சுய ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளதை அடுத்து, அரசு மேற்கொண்டு வரும் குரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில், அதிராம்பட்டினத்தில் இன்று 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து மஹல்லாவாசிகளும் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பில் அனைத்து பள்ளிவாசல்களிலும் அறிவிப்பு வெளியிட கேட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இன்று (22-03-2020) ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளதை கருத்தில் கொண்டு, அரசு மேற்கொண்டு வரும் குரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில், அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையம், கடைத்தெரு, பழைய அஞ்சலக சாலை, கிழக்கு கடற்கரைச்சாலை, ஜாவியா சாலை, செக்கடி மேடு, சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு வர்த்தகப் பகுதிகளின் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால், அதிராம்பட்டினம் முழுவதும் பொதுமக்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்சி வாகனங்கள் இயங்கவில்லை. டீ கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகங்கள் திறந்து இருந்தன.
அரசின் சுய ஊரடங்கை ஆதரித்து, அதிராம்பட்டினம் கடைத்தெரு மற்றும் மெயின் ரோடு மீன் மார்க்கெட்களில் மீன் வியாபாரங்கள் நடக்க வில்லை. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
குரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை சுகாதாரப் பணிகளை அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிராம்பட்டினம் பேரூர் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றிவிட்டு, ஆங்காங்கே பிளீச்சிங் பவுடர் இட்டும், கிருமி நாசினி தெளித்தும் தூய்மைப்படுத்தி வருகின்றனர்.
சுய ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளதை அடுத்து, அரசு மேற்கொண்டு வரும் குரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில், அதிராம்பட்டினத்தில் இன்று 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து மஹல்லாவாசிகளும் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பில் அனைத்து பள்ளிவாசல்களிலும் அறிவிப்பு வெளியிட கேட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.