.

Pages

Wednesday, March 18, 2020

பட்டுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்: 5 ஆயிரம் பேர் பங்கேற்பு (படங்கள்)

பட்டுக்கோட்டை, மார்ச் 18
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பட்டுக்கோட்டையில் சிறை நிரப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அவ்வமைப்பின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் வல்லம் ஜாஃபர், மாவட்ட துணைச் செயலாளர்கள் பாவா, அப்துல்லா, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் அப்துல்லா, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் இத்ரீஸ் மற்றும் பட்டுக்கோட்டை கிளை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெண்கள், குழந்தைகள் உட்பட 5 ஆயிரதிற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அவ்வமைப்பின் மாநிலப் பேச்சாளர் அப்துல் ஜப்பார் கண்டன உரை நிகழ்த்தினார்.

போராட்டத்தில் ஈடுபட்டோர், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். சிஏஏ க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்ஆா்சி, என்பிஆா் ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். நிறைவில், அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் அஸ்ரப் அலி நன்றி கூறினார்.
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.