.

Pages

Saturday, March 28, 2020

அதிராம்பட்டினம் பகுதியில் டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி தெளிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 28
அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர்  அறிவுறுத்தலின் பேரில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி. பழனிவேலு தலைமையில், துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் மேற்பார்வையில், மீன் மார்க்கெட், வர்த்தகக் குடோன், வழிபாட்டுத்தலங்கள், வெளிமாநில தொழிலாளர்கள் குடியிருப்புகள், வெளிநாடுகளிருந்து வந்துள்ளவர்கள் தங்கிருக்கும் குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி கரைசல் கலந்த மருந்தினை தூய்மைப் பணியாளா்கள் தெளித்தனர்.

மேலும், அதிராம்பட்டினத்தில் உள்ள 11 அங்கன்வாடிகள், கூட்டுறவு வங்கி, மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் அனைத்துக் கடைகளிலும், 1 மீட்டா் இடைவெளியில் சமூக இடைவெளிக் கோடுகள் போடப்பட்டன. குடியிருப்புகள், வர்த்தகப் பகுதிகளில் குப்பைகள் அகற்றுதல், பிளிச்சிங் பவுடர் இடுதல், கைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளித்தல், கழிவு நீர் வடிகால் தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட பொது சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.