.

Pages

Monday, March 16, 2020

பணத்தை கொடுங்க.... வங்கி முன் திரண்ட பெண்கள் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 16
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். சிஏஏ க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்ஆா்சி, என்பிஆா் ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில், 26-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, ஒரே நேரத்தில் திரளான பெண்கள் தங்களது வங்கி கணக்கு புத்தகத்துடன் அதிராம்பட்டினம் கனரா வங்கி முன்பு இன்று திங்கட்கிழமை காலை குவிந்து, பணத்தை திரும்பப் பெற வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், வங்கி மேலாளர் கலா வங்கி முன் திரண்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஒரே நேரத்தில் இவ்வளவு பேருக்கும் பணம் கொடுக்க முடியாது. குறிப்பிட்ட நபர்களுக்கு பணம் கொடுக்கிறோம். மற்றவர்கள் டோக்கன் முறையில் பணம் எடுத்து கொள்ளலாம் என்றார். இதையடுத்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி சுப்பிரமணியன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் பெண்கள் கலைந்து சென்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.