அதிராம்பட்டினம், மார்ச் 08
அரிமா சங்க ஆரூர் மண்டல சந்திப்புக் கூட்டம் திருவாரூர் ஏ.கே.எம் டவர்சில் (07-03-2020) சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அரிமா சங்க மண்டலத் தலைவர் கே.ரமேஷ்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை, அரிமா சங்க மாவட்ட ஆளுநர் ஜெ.கார்த்திக்பாபு தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆவணப்பட இயக்குநர் பாரதி சிறப்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து 3 முறை நடத்தப்பட்ட இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்களில் 1602 பேருக்கு கண் பரிசோதனை செய்து, 186 பேருக்கு IOL அறுவைச் சிகிச்சை அளித்தது மற்றும் முகாம்களில் பங்கேற்ற கண் நோயாளிகள் 230 பேருக்கு மலிவு விலையில் மூக்குக் கண்ணாடிகள் வழங்கிய சேவைப்பணியை பாராட்டி, அதிராம்பட்டினம் அரிமா சங்கத்திற்கு சிறந்த சேவை விருது வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. விருதினை சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் , செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மேலும், அதிராம்பட்டினம் அரிமா சங்கத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து சேவையாற்றி வரும் சங்க மாவட்டத் தலைவர்கள் எம். அகமது, எம்.சாகுல் ஹமீது ஆகியோருக்கு விருது வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அரிமா சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் ஏம்.ஏ முகமது அப்துல் காதர், எம்.முகமது அபூபக்கர், என்.உதயகுமார், எம்.கே,எம் அபூபக்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரிமா சங்க ஆரூர் மண்டல சந்திப்புக் கூட்டம் திருவாரூர் ஏ.கே.எம் டவர்சில் (07-03-2020) சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அரிமா சங்க மண்டலத் தலைவர் கே.ரமேஷ்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை, அரிமா சங்க மாவட்ட ஆளுநர் ஜெ.கார்த்திக்பாபு தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆவணப்பட இயக்குநர் பாரதி சிறப்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து 3 முறை நடத்தப்பட்ட இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்களில் 1602 பேருக்கு கண் பரிசோதனை செய்து, 186 பேருக்கு IOL அறுவைச் சிகிச்சை அளித்தது மற்றும் முகாம்களில் பங்கேற்ற கண் நோயாளிகள் 230 பேருக்கு மலிவு விலையில் மூக்குக் கண்ணாடிகள் வழங்கிய சேவைப்பணியை பாராட்டி, அதிராம்பட்டினம் அரிமா சங்கத்திற்கு சிறந்த சேவை விருது வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. விருதினை சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் , செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மேலும், அதிராம்பட்டினம் அரிமா சங்கத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து சேவையாற்றி வரும் சங்க மாவட்டத் தலைவர்கள் எம். அகமது, எம்.சாகுல் ஹமீது ஆகியோருக்கு விருது வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அரிமா சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் ஏம்.ஏ முகமது அப்துல் காதர், எம்.முகமது அபூபக்கர், என்.உதயகுமார், எம்.கே,எம் அபூபக்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.