பட்டுக்கோட்டை, மார்ச் 10
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, பட்டுக்கோட்டை வடசேரி ரோடு பெரிய பள்ளிவாசல் அருகே தொடர் போராட்டம் 15-வது நாளாக இன்று (10-03-2020) செவ்வாய்க்கிழமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக, பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அமைதிப் பேரணி இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் இந்திய தேசியக்கொடிகளை கையில் ஏந்தியவாறும், கருப்பு பலூன்களை கையில் பிடித்தபடியும், வாயில் கருப்பு துணி கட்டியவாறும், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீா்மானம் நிறைவேற்றி, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆா்) ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியாகச் சென்றனர்.
பேரணி, பட்டுக்கோட்டை வடசேரி ரோடு பெரிய பள்ளிவாசல் அருகே தொடங்கி, பெரியதெரு, தலையாரித்தெரு, தேரடித்தெரு வழியாக மீண்டும் பள்ளிவாசல் தெருவில் நடைபெறும் தொடர் போராட்டக் களத்தில் நிறைவடைந்தது.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, முன்னாள் எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை, பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, பட்டுக்கோட்டை வடசேரி ரோடு பெரிய பள்ளிவாசல் அருகே தொடர் போராட்டம் 15-வது நாளாக இன்று (10-03-2020) செவ்வாய்க்கிழமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக, பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அமைதிப் பேரணி இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் இந்திய தேசியக்கொடிகளை கையில் ஏந்தியவாறும், கருப்பு பலூன்களை கையில் பிடித்தபடியும், வாயில் கருப்பு துணி கட்டியவாறும், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீா்மானம் நிறைவேற்றி, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆா்) ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியாகச் சென்றனர்.
பேரணி, பட்டுக்கோட்டை வடசேரி ரோடு பெரிய பள்ளிவாசல் அருகே தொடங்கி, பெரியதெரு, தலையாரித்தெரு, தேரடித்தெரு வழியாக மீண்டும் பள்ளிவாசல் தெருவில் நடைபெறும் தொடர் போராட்டக் களத்தில் நிறைவடைந்தது.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, முன்னாள் எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை, பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.