.

Pages

Sunday, March 15, 2020

அதிராம்பட்டினத்தில் ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 15
திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க தொடக்க விழா அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் மினி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திருச்சி ஜமால் முகமது கல்லூரிச் செயலர் ஏ.கே காஜா நஜ்முதீன் முன்னாள் மாணவர்கள் சங்க அதிராம்பட்டினம் பிரிவை தொடங்கி வைத்துப் பேசினார். சமூக ஆர்வலர்கள் எம்.எஸ்.எம் ராபியா, ஏ. அப்துல் ரெஜாக், இ.வாப்பு மரைக்காயர், ஏ.ஹசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, முன்னாள் மாணவர்கள் சங்க அதிராம்பட்டினம் பிரிவு ஒருங்கிணைப்பாளர் எம்.கஜாலி முகமது செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பின் பேரில் பத்ருத்தீன், எம். நிஜாமுதீன், அகமது அனஸ், கிஜார், சேக் தம்பி, அஸ்ரப், சாலிகு, ஆசிப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.