.

Pages

Tuesday, March 24, 2020

அதிராம்பட்டினத்தில் பொது சுகாதாரப்பணிகள் தீவிரம்: இரவு,பகல் பாராமல் களப்பணி (படங்கள்)

அதிரை பேரூர் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் திறப்பு
அதிராம்பட்டினம், மார்ச் 24
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இரவு, பகல் பாராமல் களப்பணியாற்றிவரும் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களின் பணிகளைப் பாராட்டி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர்  அறிவுறுத்தலின் பேரில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட அறிவுறுத்தியதின் பேரில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி. பழனிவேலு தலைமையில், துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் மேற்பார்வையில், பேரூராட்சி துப்புரவு களப்பணியாளர்கள், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதி குடியிருப்புகள், வர்த்தகப் பகுதிகள், ஆகியவற்றில் குப்பைகள் அகற்றுதல், பிளிச்சிங் பவுடர் இடுதல், கைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளித்தல், கழிவு நீர் வடிகால் தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட பொது சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதவிர, பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, தரகர் தெரு 5 லட்சம் லிட்டர் கொள்ளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மிலாரிக்காடு சம்பு ஆகியவற்றில் குளோரினேஷன் செய்யும் பணி, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் மேற்பார்வையில், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஈடுபட்டனர். இதையடுத்து, அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

இரவு, பகல் பாராமல் களப்பணியாற்றிவரும் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களின் பணிகளைப் பாராட்டி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
 




 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.