.

Pages

Tuesday, March 10, 2020

அதிராம்பட்டினத்தில் பேச இயலாத ~ காது கேளாதோருக்கான பரிசோதனை மற்றும் தொழிற்கல்விக்கான ஆலோசனை முகாம்!

அதிராம்பட்டினம், மார்ச் 10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத ~ காது கேளாதோர் நலச் சங்கம் மற்றும் பட்டுக்கோட்டை மஞ்ஜூ பவுண்டேசன் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலப்பள்ளி இணைந்து பேச இயலாத ~ காது கேளாதோருக்கான சிறப்பு பரிசோதனை மற்றும் தொழிற்கல்விக்கான ஆலோசனை முகாம் அதிராம்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, நலச்சங்கத் தலைவர் எஸ்.எம்.ஒய் ஹாஜா சரீப் தலைமை வகித்தார். மஞ்ஜூ பவுண்டேசன் நிறுவனர் ஆர்.செல்வராஜ், தலைவர் எஸ்.கெளரி, செயலாளர் ஆர்.கல்யாணி, பொருளாளர் என்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், பேச்சுப்பயிற்சி மற்றும் கேட்புத்திறன் நிபுணர் பிரமிளா ராஜ்குமார் கலந்துகொண்டு 40 க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்தார். மேலும், தொழிற்கல்விக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாட்டினை, சுந்தரநாயகிபுரம் ராமலிங்கம் செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத ~ காது கேளாதோர் நலச்சங்க துணைத்தலைவர் ஏ.சிராஜுதீன், பொதுச்செயலாளர் மனோகர் செல்வநாதன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஆர்.மன்சூர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.