.

Pages

Friday, March 20, 2020

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: புதுமனைத்தெரு முஹ்யித்தீன் ஜும்மா பள்ளிவாசல் ஜும்மா தொழுகை நேரம் மாற்றம்!

அதிராம்பட்டினம், மார்ச் 20
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபையின் அறிவிப்பை ஏற்று, அதிராம்பட்டினம், புதுனைத்தெரு முஹ்யித்தீன் ஜும்மா பள்ளிவாசல் ஜும்மா தொழுகை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (20-03-2020) வெள்ளிக்கிழமை குத்பா உரை பகல் 1 மணிக்கு தொடங்கி, ஜும்மா தொழுகை 1:20 க்குள் நிறைவடையும். தமிழ் பயான் நடைபெறாது.               

எனவே, தொழுகையாளிகள் அவரவர் இல்லங்களில் ஒழு செய்துவிட்டு பகல் 12 :50 மணிக்கு முஹ்யித்தீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு வருமாறும், முன் பின் சுன்னத் தொழுகைகளை தங்களது வீடுகளில் தொழுது கொள்ளுமாறு, புதுமனைத்தெரு முஹ்யித்தீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1 comment:

  1. Also we can take musallah (prayer mat) from our home and use over the mosque carpet and wash our private prayer mat after every Jummah with usual detergent by hand or washing machine.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.